News October 1, 2025

மாணவர்கள் பின்தொடரும் நபர் சரியானவரா? வெற்றிமாறன்

image

மாணவர்கள் யாரை பின்தொடர வேண்டும், அவ்வாறு பின்தொடரும் நபர் சரியானவரா என்பதை ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும் என்று வெற்றிமாறன் அறிவுறுத்தியுள்ளார். கல்லூரி விழா ஒன்றில் பேசிய அவர், மனிதன் ஒரு Socio-political animal என்பதை சரியாக புரிந்து, நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்றும் பகுத்தறிந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றார். கரூர் துயரம் சம்பவம் நடந்துள்ள நிலையில், இவ்வாறு அவர் கூறியது கவனிக்கத்தக்கது.

Similar News

News March 10, 2026

ஓம் பிர்லாவுக்கு எதிரான தீர்மானம்.. காரசார விவாதம்

image

சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் லோக்சபாவில் விவாதத்திற்கு வந்துள்ளது. அப்போது பேசிய காங்., MP கே.சி.வேணுகோபால், பல ஆண்டுகளாக துணை சபாநாயகரை அரசு நியமிக்கவில்லை; இது அரசமைப்பில் வெற்றிடத்தை உருவாக்கியுள்ளதாக கூறியுள்ளார். மேலும், இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான அவை நடவடிக்கைகளை தலைமை தாங்க ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

News March 10, 2026

தோசை, ஆம்லெட், வடை, பஜ்ஜி சாப்பிட முடியாது

image

TN முழுவதும் வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டால், ஹோட்டல்கள் முதல் சிறு டீ கடைகள் வரை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சிலிண்டர் பிரச்னை சரியாகும் வரை பல்வேறு ஊர்களில் ஹோட்டல்கள், டீ கடைகள் இயங்கும் நேரம் பாதியாக குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், ஹோட்டல்களில் தோசை, ஆம்லெட் கிடைக்காது என்றும் டீ கடைகளில் வடை, பஜ்ஜி போன்றவை கிடைக்காது என்றும் போர்டுகளில் எழுதி வைக்கப்பட்டுள்ளன.

News March 10, 2026

TR பாலு, RS பாரதிக்கு ஜெயில் உறுதி: அண்ணாமலை

image

தான் தொடர்ந்துள்ள அவதூறு வழக்குகளில் TR பாலு, RS பாரதி இருவருக்கும் நிச்சயம் ஜெயில் தண்டனை கிடைக்கும் என அண்ணாமலை கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரத்தில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்காக பாஜக சதித்திட்டம் என RS பாரதி பேசியதாக அவர் மீது அண்ணாமலை வழக்கு தொடர்ந்தார். இன்று, அந்த வழக்கில் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜராகி, RS பாரதிக்கு எதிரான சாட்சியங்களை சமர்ப்பித்துள்ளார்.

error: Content is protected !!