News August 25, 2024
தவெக மாநாடு இடம் மீண்டும் மாறுகிறதா?

தவெக மாநாடு நடைபெறும் இடம் மீண்டும் மாற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்ட அவர், திருச்சி, மதுரை மாவட்டங்களில் இடம் கிடைக்காததால், விக்கிரவாண்டியை இறுதி செய்ததாகக் கூறப்பட்டது. எனினும், தற்போது மாநாடு நடைபெறும் இடம் மீண்டும் மாற இருப்பதாக கூறப்படுகிறது. தஞ்சாவூர், சேலம், நெல்லையில் இடம் தேர்வு செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Similar News
News March 5, 2026
அது வெறும் குரங்கல்ல.. 13-ம் நாள் காரியம் செய்த மக்கள்!

குரங்கிற்கு காரியமா என தோன்றலாம். ஆனால், ம.பி.,யின் டலபட்புரா மக்கள், அது தங்கள் வீட்டின் அங்கம் என உருகுகின்றனர். பல ஆண்டுகள் தங்களுடன் வாழ்ந்து வந்த குரங்கு விபத்தில் இறந்துவிட கிராமமே சோகத்தில் மூழ்கியது. கண்ணீர் மல்க இறுதி மரியாதை செய்தவர்கள், 13-ம் நாள் காரியமும் செய்துள்ளனர். குரங்கின் போட்டோவிற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, குரங்குடனான நினைவுகளை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்துள்ளனர்.
News March 5, 2026
மகளிருக்கு ₹7,000.. தமிழக அரசு மகிழ்ச்சி செய்தி

மகளிர் உரிமைத் தொகை ₹3,000 + கோடைக்கால சிறப்பு நிதி ₹2,000 என மொத்தம் ₹5,000 ஏற்கெனவே மகளிரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இதனையடுத்து, அரசு ஓய்வூதியம் பெறும் ஆதரவற்ற பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் உள்ளிட்டோருக்கு ₹2,000 சிறப்பு நிதி வழங்கப்பட்டுள்ளது. மொத்தமாக ₹7,000 வரவு வைக்கப்பட்டுள்ள நிலையில், மகளிருக்கு மேலும் சில மகிழ்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
News March 5, 2026
CM ஸ்டாலின் பொய் சொல்கிறார்: அன்புமணி

505 தேர்தல் வாக்குறுதிகளில் வெறும் 66 வாக்குறுதிகளைத்தான் திமுக நிறைவேற்றியுள்ளதாக அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். இது வெறும் 13% தான்; ஆனால் 98% நிறைவேற்றிவிட்டதாக ஸ்டாலின் பொய் சொல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர், துப்புரவு தொழிலாளர்கள் என அனைவரும் திமுகவிற்கு எதிராக வாக்களித்து தங்களுக்கு வெற்றியை கொடுப்பார்கள் எனவும் கூறியுள்ளார்.


