News November 26, 2024
ஐபிஎல் ஏலம்: மொத்தம் ₹639.15 கோடி

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டுக்கான மெகா ஏலம் நவம்பர் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அதில் 10 அணிகளும் சேர்த்து மொத்தம் 182 வீரர்களை ஏலத்தில் எடுத்தனர். அந்த வீரர்களுக்காக மொத்தம் ₹639.15 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் ₹27 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் மார்ச் 14 – ஏப்ரல் 25 வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது
Similar News
News August 22, 2025
விஜய் கருத்து ஒரு மொட்டை கடிதாசி: கமல்ஹாசன்

மதுரையில் நடந்த TVK 2-வது மாநாட்டில் பேசிய விஜய், நான் ஒன்றும் ரிட்டயர் ஆன பிறகு அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரவில்லை. படைக்கலனோடு வந்துள்ளேன் எனத் தெரிவித்திருந்தார். இதுகுறித்து கமலிடம் கேட்டபோது, அவர் எனது பெயரையோ அல்லது வேறு யார் பெயரையோ குறிப்பிட்டு இந்த கருத்தை கூறாத போது, நான் ஏன் முகவரி இல்லாத கடிதத்துக்கு பதில் போட வேண்டும் என கேட்டார். மேலும் விஜய்யை தனது தம்பி என்றும் தெரிவித்தார்.
News August 22, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஆகஸ்ட் 22 – ஆவணி 6 ▶ கிழமை: வியாழன் ▶ நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM, 4:45 PM – 5:45 PM ▶ கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶ எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶ குளிகை: 7:30 AM – 9:00 AM ▶ திதி: அமாவாசை ▶ சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: தேய்பிறை.
News August 22, 2025
அரசியல் கூட்டம் அல்ல, நடிகரை பார்க்க வந்த கூட்டம்: தமிழிசை

TVKவின் 2-வது மாநில மாநாட்டில் விஜய் பேசுகையில், கொள்கை எதிரி பாஜக என்றும், அரசியல் எதிரி திமுக எனவும் தெரிவித்தார். இதுபற்றி பேசிய தமிழிசை, விஜய்யின் மாநாடு அரசியல் கூட்டம் போல் இல்லை என்றும், ஒரு நடிகரை பார்க்க வந்த கூட்டம் போல் உள்ளதாகவும் கூறினார். கொள்கை எதிரி பாஜக என்று கூறும் விஜய், தனது கொள்கையை கூறவில்லை என்றும், பாஜகவை விமர்சிக்கும் விஜய் காங்கிரஸை விமர்சிக்காதது ஏன் எனவும் கேட்டார்.