News September 14, 2024

இந்திக்கு இந்தியா கொடுத்த அங்கீகாரம்..!

image

இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தி தேர்ந்தெடுக்கப்பட்டதை கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் செப்.14-ம் தேதி தேசிய இந்தி தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தியை தேசிய மொழியாக அறிவிக்கக் கோரி, இந்தி அறிஞர்கள் பலர் ஒன்று சேர்ந்து 1918 முதல் போராடி வந்தனர். இதனைத் தொடர்ந்து, நாட்டில் அதிகம் பேசப்படும் மொழி என்ற அடிப்படையில் 1949-ம் ஆண்டு செப்.14-ல் இந்தியை அலுவல் மொழியாக அரசமைப்புச் சட்டம் அங்கீகரித்தது.

Similar News

News January 17, 2026

பலாத்காரத்துக்கு காரணம் அழகு தான்: காங்., MLA

image

ஒரு அழகான பெண் சாலையில் நடந்து செல்வதை பார்த்தால் எந்த ஆணும் சலனப்படத்தான் செய்வான். அதுதான் பலாத்காரத்துக்கு காரணம் என மத்திய பிரதேச காங்., MLA பூல்சிங் பரையா கூறியுள்ளது சர்ச்சையாகியுள்ளது. மேலும் SC, ST வகுப்பைச் சேர்ந்த பெண்கள் அழகற்றவர்கள் எனவும் அவர் கூறியுள்ளார். இதனையடுத்து அவரை கட்சியில் இருந்து நீக்கக்கோரி ராகுல்காந்திக்கு அம்மாநில CM மோகன் வலியுறுத்தியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News January 17, 2026

அது BRICS நாடுகளின் பயிற்சி அல்ல: INDIA

image

தென்னாப்பிரிக்கா கடற்பரப்பில் நடந்த பலதரப்பு கடற்படை பயிற்சியில் இந்தியா பங்கேற்காதது சர்ச்சையானது. இந்நிலையில் அது BRICS-ன் அதிகாரப்பூர்வ பயிற்சி அல்ல என்றும், அனைத்து பிரிக்ஸ் உறுப்பு நாடுகளும் அதில் பங்கேற்கவில்லை என்றும் இந்திய அரசு தெரிவித்துள்ளது. BRICS 2026 மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில், IBSAMAR கடற்பயிற்சியில் மட்டுமே இந்தியா பங்கேற்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 17, 2026

நாப்கின் பயன்படுத்தும் பெண்களுக்கு ஆபத்து PHOTOS

image

இந்தியாவில் 64% பெண்கள் சானிட்டரி நாப்கின் பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் கோடி சானிட்டரி நாப்கின்கள் பயன்படுத்தப்படுகிறது. அதிலுள்ள வேதிப்பொருள்கள் அதிக அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்துவதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். மேல் உள்ள போட்டோக்களை ஸ்வைப் செய்து அதன் ஆபத்துகளை காணலாம்.

error: Content is protected !!