News September 14, 2024
இந்திக்கு இந்தியா கொடுத்த அங்கீகாரம்..!

இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தி தேர்ந்தெடுக்கப்பட்டதை கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் செப்.14-ம் தேதி தேசிய இந்தி தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தியை தேசிய மொழியாக அறிவிக்கக் கோரி, இந்தி அறிஞர்கள் பலர் ஒன்று சேர்ந்து 1918 முதல் போராடி வந்தனர். இதனைத் தொடர்ந்து, நாட்டில் அதிகம் பேசப்படும் மொழி என்ற அடிப்படையில் 1949-ம் ஆண்டு செப்.14-ல் இந்தியை அலுவல் மொழியாக அரசமைப்புச் சட்டம் அங்கீகரித்தது.
Similar News
News September 19, 2025
ADMK-லிருந்து பலர் DMK-வுக்கு வரவுள்ளனர்: மருது அழகுராஜ்

அபகரிப்பு அரசியலை விட்டு, அரவணைப்பு அரசியலை நோக்கி நகர்ந்துள்ளதாக திமுகவில் இணைந்த <<17753920>>மருது அழகுராஜ்<<>> கூறியுள்ளார். 20 ஆண்டு காலம் அதிமுகவில் பயணித்து குறிப்பாக ஜெயலலிதாவின் உரை ஆசிரியராக இருந்த தனக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை என தெரிவித்தார். மேலும், இபிஎஸ் அதிமுகவை அபகரித்தார், அவரை பாஜக அபகரித்துவிட்டது என கூறிய அவர், மேலும் பலர் அதிமுகவை விட்டு விலகி திமுகவில் இணைய உள்ளனர் என்றார்.
News September 19, 2025
BREAKING: விஜய் வீட்டில் அதிகாலையில் பரபரப்பு

சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டின் மாடியில் அமர்ந்திருந்த இளைஞரால் அதிகாலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு வளையங்களை தாண்டி வீட்டின் மொட்டை மாடிக்கு அந்த இளைஞர் சென்றது எப்படி என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசியல் கட்சி தொடங்கிய பிறகு உள்துறை அமைச்சகம் அவருக்கு ‘Y’ பாதுகாப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
News September 19, 2025
புடின் என்ன ஏமாற்றிவிட்டார்: டிரம்ப்

ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்த விஷயத்தில் புடினின் நடவடிக்கையால் ஏமாற்றம் அடைந்திருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்துவதுதான் மிக எளியது என நினைத்ததாகவும், தான் அதிபராக இருந்திருந்தால் 4 ஆண்டுகளுக்கு இந்த போர் தொடர்ந்திருக்காது எனவும் கூறினார். என்ன ஆனாலும் போர்நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என கூறிய அவர், இஸ்ரேல்-காஸா போரும் முடிவுக்கு வரும் என கூறியுள்ளார்.