News September 14, 2024
இந்திக்கு இந்தியா கொடுத்த அங்கீகாரம்..!

இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தி தேர்ந்தெடுக்கப்பட்டதை கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் செப்.14-ம் தேதி தேசிய இந்தி தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தியை தேசிய மொழியாக அறிவிக்கக் கோரி, இந்தி அறிஞர்கள் பலர் ஒன்று சேர்ந்து 1918 முதல் போராடி வந்தனர். இதனைத் தொடர்ந்து, நாட்டில் அதிகம் பேசப்படும் மொழி என்ற அடிப்படையில் 1949-ம் ஆண்டு செப்.14-ல் இந்தியை அலுவல் மொழியாக அரசமைப்புச் சட்டம் அங்கீகரித்தது.
Similar News
News December 6, 2025
உலக சாதனை படைத்த நிதிஷ் குமார்

உலக சாதனை புத்தகத்தில் (லண்டன்) பிஹார் CM நிதிஷ் குமார் இடம்பிடித்துள்ளார். பிஹார் தேர்தலில் வெற்றிபெற்று, அவர் 10-வது முறையாக முதல்வராக பதவியேற்றதை அங்கீகரித்து அவரது பெயர் உலக சாதனை புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. கூட்டணியில் கருத்து வேறுபாடு காரணமாக அவர், பலமுறை ராஜிநாமா செய்திருந்தாலும் மீண்டும் RJD அல்லது BJP உடன் கூட்டணி அமைத்து CM அரியணையில் அமர்ந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
News December 6, 2025
ICC விருது: ஷபாலி வர்மாவுக்கு கிடைக்குமா?

ICC-யின் நவம்பர் மாத சிறந்த வீராங்கனைக்கான விருது பட்டியலில் ஷபாலி வர்மா இடம்பெற்றுள்ளார். மகளிர் உலகக் கோப்பை தொடரில் அவர் 2 போட்டிகளில் விளையாடி இருந்தாலும், இறுதிப்போட்டியில் 87 ரன்கள் குவித்ததுடன் 2 விக்கெட்களும் வீழ்த்தி இந்தியா மகுடம் சுடுவதற்கு உதவினார். இப்பட்டியலில் தாய்லாந்தின் புத்தவோங், UAE-ன் ஈஷா ஒசாவும் உள்ளனர். எனினும், ஷபாலிக்கே விருது கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.
News December 6, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: செங்கோன்மை
▶குறள் எண்: 541
▶குறள்:
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.
▶பொருள்: குற்றம் இன்னதென்று ஆராய்ந்து எந்தப் பக்கமும் சாயாமல் நடுவுநிலைமை தவறாமல் வழங்கப்படுவதே நீதியாகும்.


