News April 4, 2025
INDIA கூட்டணி ஆட்சியில் வக்ஃபு மசோதா ரத்து: மம்தா

மத்தியில் புதிய அரசு அமையும் போது, வக்ஃபு திருத்த மசோதா ரத்து செய்யப்படும் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். நாட்டைப் பிரிப்பதற்காக இந்த மசோதாவை பாஜக நிறைவேற்றியுள்ளதாகவும், புதிய அரசு அமையும் போது, மசோதாவை ரத்து செய்ய தேவையான திருத்தங்களை செய்வோம் எனவும் அவர் உறுதிபட கூறியுள்ளார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, மக்களவை, மாநிலங்களையில் வக்ஃபு திருத்த மசோதா நிறைவேறியுள்ளது.
Similar News
News December 4, 2025
நத்தம் அருகே சோகம்..கூலித்தொழிலாளி பலி!

நத்தம் அருகே உள்ள புதுப்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 45). கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்தன்று டூவீலரில் வத்திபட்டிக்கு சென்றுவிட்டு மதுரைதுவரங்குறிச்சி நான்கு வழிச்சாலையில், விளாம்பட்டி பள்ளிவாசல் பகுதியில் வந்தபோது, அவரது டூவீலரும் எதிரே வந்த காரும் மோதியது. இதில்,படுகாயம் அடைந்த சிவக்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 4, 2025
சற்றுமுன்: அதிமுகவில் இணைந்தார்

2026 தேர்தல் வரவிருப்பதால், திமுகவும், அதிமுகவும் மாற்றுக்கட்சியினரை இணைக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளன. குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் செந்தில் பாலாஜி – எஸ்.பி.வேலுமணி இடையே மாற்றுக்கட்சியினரை இணைப்பதற்கான போட்டி நடந்து வருகிறது. இந்நிலையில், தொண்டாமுத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக மாணவரணி துணை அமைப்பாளர் ஆர்.கார்த்திகேயன் உள்ளிட்டோர் எஸ்.பி வேலுமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
News December 4, 2025
நாய் வாகனம் இன்றி காட்சி காட்சிதரும் யோகபைரவர்!

சிவகங்கை, திருப்பத்தூரிலுள்ள திருத்தளிநாதர் கோயிலில் பைரவர் நாய் வாகனம் இன்றி காட்சி தருகிறார். சிவ பக்தனான இரண்யாட்சனின் மகன்கள் தேவர்களை துன்புறுத்த, சிவன் பைரவராக விஸ்வரூபம் எடுத்து, அவர்களை வதம் செய்தார். அசுரர்கள் என்றாலும் இருவரும் சிவ பக்தர்கள் என்பதால் பைரவருக்கு தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷம் நீங்க இங்கு பூஜை செய்து, யோகபைரவராக காட்சி தருகிறார். யோக நிலையில் உள்ளதால் நாய் வாகனம் இல்லை.


