News April 24, 2025
என் குடும்பத்தை தவறாக பேசினால்.. ARR-ன் அந்த மனசு!

கடவுளே ஆனாலும், பொது வாழ்வில் இருந்தால் அவரும் விமர்சிக்கப்படுவார் என ARR தெரிவித்துள்ளார். விவாகரத்திற்கு பிறகு, தனது குடும்பத்தை பற்றி யாராவது தவறாக பேசினால், அவர்களுக்காக கடவுளிடம் மன்னிப்பு கேட்பேன், அவர்களை நல்வழிப்படுத்த பிரார்த்திப்பேன் எனவும் ARR தெரிவித்துள்ளார். அனைவருக்கும் தாய், சகோதரி, மனைவி இருப்பதால், மற்றவர்களைப் பற்றி அநாவசியமாக பேச வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News December 9, 2025
திருப்பரங்குன்றம் விவகாரம்: இன்று விசாரணை

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று மதுரை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. தனி நீதிபதி G.R.சுவாமிநாதன் அமர்வில் இந்த வழக்கு விசாரிக்கப்பட உள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற கோர்ட் உத்தரவிட்டும் ஏற்றாததால், அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News December 9, 2025
அண்ணாமலையை ரகசியமாக சந்தித்தார்.. புதிய திருப்பம்

கோவையில் உள்ள தனது இல்லத்தில் TTV தினகரனுக்கு அண்ணாமலை நேற்று இரவு விருந்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, இருவரும் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. விருந்தின் நடுவே டெல்லியில் இருந்து போன் வந்ததால், அண்ணாமலை உடனடியாக புறப்பட்டு சென்றுள்ளாராம். டிடிவி கூட்டணி ஆப்சனை ஓப்பனாக வைத்திருக்கும் நிலையில், அண்ணாமலை உடனான சந்திப்பு சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
News December 9, 2025
55,000 பேருக்கு புதிய ரேஷன் கார்டு

ரேஷன் கார்டுதாரர்களுக்கு, அடுத்த மாதம் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், புதிய கார்டு கோரி பெறப்பட்ட விண்ணப்பங்களில் 1.07 லட்சம் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதில் தகுதியான 55,000 பேருக்கு ஒரு சில நாள்களிலும், மற்றவர்களுக்கு இம்மாத இறுதிக்குள்ளும் கார்டுகள் வழங்க உள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.


