News October 12, 2025
ஞாயிறு அன்று இதை செய்தால் தீராத கடனும் தீரும்

இரவு 8 – 11.30 மணிக்குள் எந்த நேரத்திலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். 4 மிளகை எடுத்துக்கொண்டு, நிலை வாசலுக்கு வெளியே வாருங்கள். குலதெய்வத்தை மனதார வேண்டி கையில் இருக்கும் மிளகை தலைக்கு இடது புறமாக 3 முறை மட்டும் சுற்றுங்கள். அதன் பிறகு, 4 மிளகையும் 4 திசைகளில் கண்ணுக்கு தெரியாமல் தூர எறிந்து விடுங்கள். அவ்வளவுதான். இதை 3 வாரம் தொடர்ந்து செய்தால், கஷ்டம் நீங்கும் என்பது ஐதீகம்!
Similar News
News October 12, 2025
‘பால்டாயில் பாய்’ உதயநிதி: இபிஎஸ் அட்டாக்

அதிமுகவை கடுமையாக அட்டாக் செய்து வரும் உதயநிதியை ‘பால்டாயில் பாய்’ என குறிப்பிட்டு இபிஎஸ் பதிலடி கொடுத்துள்ளார். பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததால், திமுக பயப்படுகிறது. தற்போது திமுக கூட்டணியில் உள்ள காங்., கம்யூ., விசிக உள்ளிட்ட கட்சிகளும் பதறுகின்றனர். தோல்வி பயத்தால், எதை பேசுவது என தெரியாமல் ஸ்டாலினும், அவரது கூட்டணி கட்சித் தலைவர்களும் பேசி வருகின்றனர் என சாடினார்.
News October 12, 2025
FLASH: சிக்கன் விலை உயர்வு

நாமக்கல் சந்தையில் கறிக்கோழி விலை கிலோவுக்கு ₹3 அதிகரித்துள்ளது. இதனால், கறிக்கோழி உயிருடன் ஒரு கிலோ ₹95-க்கு விற்பனையாகிறது. முட்டைக்கோழி கிலோ ₹120-க்கும், முட்டை ₹5.50-க்கும் விற்பனையாகிறது. சென்னையை பொறுத்தவரையில் கறிக்கோழி கிலோ 160-க்கும், தோல் நீக்கிய கறி கிலோ ₹200-₹220 வரையிலும் விற்பனையாகிறது. புரட்டாசி மாதம் நிறைவடைய உள்ளதால் சிக்கன் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. உங்கள் ஊரில் விலை என்ன?
News October 12, 2025
ரேஷன் கார்டில் இத உடனே பண்ணுங்க!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் அதே பகுதியில்தான் வசிக்கிறார்களா என்பதை ஆய்வு செய்து அவர்களின் பெயரை ரேஷன் அட்டையில் இருந்து நீக்கும் நடவடிக்கையை அரசு எடுத்துவருகிறது. இதனால், உங்கள் ரேஷன் அட்டையை உடனே புதுப்பிக்க வேண்டும். அருகில் உள்ள இ-சேவை மையத்துக்கு சென்றோ அல்லது https://www.tnpds.gov.in/ இணையதளம் வாயிலாகவோ உங்கள் முகவரியை அப்டேட் செய்யலாம். ஆதார் (அ) EB Bill வைத்தே இதனை மாற்றலாம். SHARE.