News September 3, 2025

உங்களை நாய் கடித்தால் உடனே இத பண்ணுங்க!

image

நாய்கள் கடித்துவிட்டால், என்ன செய்ய வேண்டும் என டாக்டர்கள் சொல்லும் அறிவுரையை கேளுங்க. காயம் ஏற்பட்ட இடத்தை 15 நிமிடங்களாவது Running water-ல் காயத்தை கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து, 5 டோஸ் கொண்ட PEP எனப்படும் ரேபிஸ் தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும். உடனடியாக இந்த ஊசியை போட்டுக் கொள்ள வேண்டியது அவசியமானது. தடுப்பூசியை போட தாமதித்தால், அது உயிரிழப்பு வரை செல்லலாம். SHARE IT.

Similar News

News March 7, 2026

பழைய சாம்பாரால் பறிபோன உயிர்

image

பெங்களூருவில் பழைய சாம்பாரால் ஏற்பட்ட சண்டையில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 3 நாள் பழைய சாம்பாரை மீண்டும் சூடுபடுத்தி பரிமாறியதால் கணவன் கோபத்தில் திட்டியுள்ளார். இதில் மனமுடைந்த அவர் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லியை குடித்து உயிரிழந்தார். 27 வயதான இவருக்கு திருமணமாகி 5 வருடங்களான நிலையில் 4 வயதில் குழந்தை உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 7, 2026

தோல்வியை நோக்கி செல்லும் இந்தியா

image

ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான டெஸ்டின் 2-வது இன்னிங்சில் இந்தியா தடுமாறி வருகிறது. இன்றைய 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 105/6 ரன்கள் எடுத்தது. ஏற்கெனவே இந்தியா முதல் இன்னிங்ஸில் 198 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மறுபுறம் ஆஸ்திரேலியா சதர்லேண்டின் சதத்தால் முதல் இன்னிங்சில் 323 ரன்களை எடுத்தது. 2 இன்னிங்ஸையும் சேர்ந்து சதர்லேண்ட் 6 விக்கெட்களை வீழ்த்தி பவுலிங்கிலும் அசத்தியுள்ளார்.

News March 7, 2026

மனைவியின் தாய்ப்பாலை குடித்த பிரபல நடிகர்

image

பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா, தனது மனைவியின் தாய்ப்பாலை குடித்ததாக பேசிய செய்தி தற்போது வைரலாகி வருகிறது. நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், புரதச் சத்துக்காக தனது மனைவியின் தாய்ப்பாலை குடித்ததாக கூறியுள்ளார். மேலும், அவரது மனைவி தாஹிரா, 7 sins of being mother என்ற புத்தகம் எழுதியிருந்தார். அதிலும், தனது தாய்ப்பாலை கணவர் குரானா திருடிக் குடித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!