News September 3, 2025
உங்களை நாய் கடித்தால் உடனே இத பண்ணுங்க!

நாய்கள் கடித்துவிட்டால், என்ன செய்ய வேண்டும் என டாக்டர்கள் சொல்லும் அறிவுரையை கேளுங்க. காயம் ஏற்பட்ட இடத்தை 15 நிமிடங்களாவது Running water-ல் காயத்தை கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து, 5 டோஸ் கொண்ட PEP எனப்படும் ரேபிஸ் தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும். உடனடியாக இந்த ஊசியை போட்டுக் கொள்ள வேண்டியது அவசியமானது. தடுப்பூசியை போட தாமதித்தால், அது உயிரிழப்பு வரை செல்லலாம். SHARE IT.
Similar News
News September 5, 2025
₹22.08 லட்சம் கோடியாக உயர்ந்த GST வருவாய்

2024 – 2025 நிதியாண்டில் நாட்டின் மொத்த GST வருவாய் ₹22,08,861 கோடியை எட்டியுள்ளது. கடந்த 2023 – 2024 நிதியாண்டில் மொத்த GST வருவாய் ₹20,18,249 கோடி என இருந்த நிலையில், தற்போது உயர்ந்துள்ளது. ₹1,31,115 கோடி GST வருவாய் உடன் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் முதல் 3 இடங்களில் மஹாராஷ்டிரா – ₹3,59,855 கோடி, கர்நாடகா – ₹1,59,564 கோடி, குஜராத் – ₹1,36,748 கோடியுடன் உள்ளன.
News September 5, 2025
அண்ணாமலையும் வெளியேறுவார்: புகழேந்தி

EPS தலைமையை ஏற்றால் செங்கோட்டையனுக்கு டெபாசிட் போய்விடும் என்று பெங்களூரு புகழேந்தி கூறியுள்ளார். TTV, OPS ஆகியோர் NDA கூட்டணியில் இருந்து விலகிய நிலையில், செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து விலகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அண்ணாமலையும் பாஜகவை விட்டு வெளியே வருவார் என புகழேந்தி கூறியுள்ளார். ஆனால், கட்சியில் எந்த பிரச்னையும் இல்லை என்று <<17615829>>அண்ணாமலை<<>> விளக்கம் அளித்திருந்தார்.
News September 5, 2025
துலீப் டிராபி: ருதுராஜ், ஜெகதீசன் அதிரடி சதம்

துலீப் டிராபி தொடரில் மேற்கு – மத்திய மண்டல அணிகளுக்கு இடையிலான அரையிறுதி ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த மேற்கு அணியின் ருதுராஜ் கெய்க்வாட் 184 ரன்களை விளாசி, தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆட்ட நேர முடிவில் அந்த அணி 363/6 என எடுத்திருந்தது. இதனையடுத்து களம் கண்ட மத்திய அணியின் நாராயணன் ஜெகதீசன் 148 ரன்கள் விளாசி தொடர்ந்து களத்தில் உள்ளார்.