News September 3, 2025
உங்களை நாய் கடித்தால் உடனே இத பண்ணுங்க!

நாய்கள் கடித்துவிட்டால், என்ன செய்ய வேண்டும் என டாக்டர்கள் சொல்லும் அறிவுரையை கேளுங்க. காயம் ஏற்பட்ட இடத்தை 15 நிமிடங்களாவது Running water-ல் காயத்தை கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து, 5 டோஸ் கொண்ட PEP எனப்படும் ரேபிஸ் தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும். உடனடியாக இந்த ஊசியை போட்டுக் கொள்ள வேண்டியது அவசியமானது. தடுப்பூசியை போட தாமதித்தால், அது உயிரிழப்பு வரை செல்லலாம். SHARE IT.
Similar News
News November 13, 2025
மேகதாது அணைக்கு அனுமதி வழங்கவில்லை: துரைமுருகன்

மேகதாது அணை கட்ட SC எந்த அனுமதியும் வழங்கவில்லை என்று அமைச்சர் துரைமுருகன் விளக்கமளித்துள்ளார். மேகதாதுவில் அணை கட்டுவதற்கு, கர்நாடகா தன்னிச்சையாக அறிக்கை தயாரித்துள்ளதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். முன்னதாக, இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கும் முன்பு தமிழக அரசிடம் கருத்து கேட்க வேண்டும் என காவிரி மேலாண்மை வாரியத்திற்கு SC உத்தரவிட்டிருந்தது.
News November 13, 2025
ரிலீசுக்கு முன்பே ₹325 கோடி ஈட்டிய ‘ஜனநாயகன்’

ரிலீசுக்கு முன்பே விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ கோடிகளை குவித்து வருகிறது. தமிழக திரையரங்க உரிமை ₹100 கோடிக்கும், வெளிநாட்டு உரிமைகள் ₹80 கோடிக்கும், ஆடியோ உரிமை ₹35 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளன. மேலும் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் ₹110 கோடிக்கு வாங்கியுள்ளது. இதுவரை படத்தின் மொத்த வருவாய் ₹325 கோடியை தாண்டியுள்ளது. பொங்கல் வின்னராக மாறுவாரா ‘ஜனநாயகன்’..?
News November 13, 2025
விஜயகாந்த் வீட்டில் போலீஸ் குவிப்பு.. பதற்றம் உருவானது

சமீப காலமாக, அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் ஆகியோரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இன்று, பிரேமலதா விஜயகாந்த் வீட்டுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதால், போலீஸ் குவிக்கப்பட்டு அங்கு சோதனை நடைபெற்றது. ஆனால் இது புரளி என்பது சோதனையில் தெரியவந்தது. ரஜினி, ரம்யா கிருஷ்ணன், KS ரவிக்குமார், சாக்ஷி உள்ளிட்டோர் வீடுகளுக்கும் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.


