News March 17, 2024
5 நாளில் வருவேன் என்றேன்.. 3 மாதங்கள் ஆனது

கணுக்கால் காயம் காரணமாக 2023 உலகக் கோப்பையில் இருந்து விலகியது குறித்து ஹர்திக் பாண்டியா முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார். “நான் 5 நாட்களுக்குப் பிறகு வருவேன் என்று நிர்வாகத்திடம் சொன்னேன். ஆனால், கணுக்காலில் 3 இடங்களில் ரத்தம் எடுக்கப்பட்டதால், என்னால் நடக்க முடியாமல் போனது. 10 நாட்களுக்கு வலி நிவாரணிகளை எடுத்துக்கொண்டேன். முழுமையாக குணமடைய 3 மாதங்கள் ஆனது” எனக் கூறியுள்ளார்.
Similar News
News February 16, 2026
புதுச்சேரியில் 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு லேப்டாப்!

TN போன்று புதுச்சேரியிலும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, இதில் முக்கிய அறிவிப்பை CM ரங்கசாமி வெளியிட்டுள்ளார். 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்ட நிலையில், இனி 6-ம் வகுப்பு மாணவர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் அறிவித்துள்ளார். தொழில்நுட்பங்களை மாணவர்கள் வேகமாக அறியவே இந்த ஏற்பாடாம். TN-ல் இந்த அறிவிப்பு வருமா?
News February 16, 2026
கற்றல் திறன் சோதனை.. மாணவர்களே தயாராகுங்க!

1 – 3 வரையிலான மாணவர்களுக்கான <<19149432>>கற்றல் சோதனை <<>>நாளை மறுநாள் (பிப்.18) தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் நடைபெற உள்ளது. இதேபோல், 4, 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்.20 கற்றல் சோதனை நடைபெறவுள்ளது. கடந்த கல்வியாண்டில் பள்ளிகளில் தொடங்கப்பட்ட 100 நாள் சவால் திட்டத்தின் தொடர்ச்சியாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. வாசிப்பு திறன், கணிதக் கற்றலை மேம்படுத்துவதே இதன் நோக்கம். மாணவர்களே, ரெடியா!
News February 16, 2026
இந்தியா AI-ல் முன்னிலையில் உள்ளது: மோடி

டெல்லியில் இன்று தொடங்கும் India AI Impact உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள உலகத் தலைவர்கள், நிறுவன தலைவர்கள், ஆய்வாளர்கள் & ஆர்வலர்களை வரவேற்று PM மோடி X-ல் பதிவிட்டுள்ளார். அதில், நமது நாடு AI மாற்றத்தில் முன்னணியில் உள்ளதாக தெரிவித்த PM மோடி, உச்சி மாநாட்டின் முடிவுகள் முற்போக்கான, புதுமையான மற்றும் வாய்ப்புகள் சார்ந்த எதிர்காலத்தை வடிவமைக்க உதவும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


