News March 17, 2024

5 நாளில் வருவேன் என்றேன்.. 3 மாதங்கள் ஆனது

image

கணுக்கால் காயம் காரணமாக 2023 உலகக் கோப்பையில் இருந்து விலகியது குறித்து ஹர்திக் பாண்டியா முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார். “நான் 5 நாட்களுக்குப் பிறகு வருவேன் என்று நிர்வாகத்திடம் சொன்னேன். ஆனால், கணுக்காலில் 3 இடங்களில் ரத்தம் எடுக்கப்பட்டதால், என்னால் நடக்க முடியாமல் போனது. 10 நாட்களுக்கு வலி நிவாரணிகளை எடுத்துக்கொண்டேன். முழுமையாக குணமடைய 3 மாதங்கள் ஆனது” எனக் கூறியுள்ளார்.

Similar News

News November 23, 2025

கருவுறாமை பிரச்னையா? இதோ அற்புத மூலிகை!

image

சதாவரி மூலிகை ஹார்மோன்களை சமநிலையில் வைத்திருக்க உதவுவதாக சித்தா டாக்டர்கள் கூறுகின்றனர். இந்த வேரின் சாறை காலை, மதியம், மாலை என 4 ஸ்பூன் எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் 2 ஸ்பூன் சர்க்கரை கலந்து குடிக்கலாம். இதனை தொடர்ந்து 5 நாள்களுக்கு செய்துவர மாதவிடாய் பிரச்னைகள், மன அழுத்தம், கருவுறாமை, செரிமான கோளாறு கூட சரியாகும் என்கின்றனர். இந்த அற்புதத்தை அனைவரும் அறிய, SHARE THIS.

News November 23, 2025

விஜய்க்கு இது நல்ல பாடம்: தமிழிசை

image

பிஹாரில் ஜன் சுராஜுக்கு ஏற்பட்ட படுதோல்வி, விஜய்க்கும் சீமானுக்கு ஒரு பாடம் என தமிழிசை கூறியுள்ளார். பல மாநில தேர்தல்களில் வெற்றியை நிர்ணயித்துக் கொடுத்த அரசியல் விற்பன்னர் PK-வுக்கே மக்கள் துணையில்லை எனவும் வெறும் விளம்பரமோ, அலங்கார அரசியலோ வேலைக்கு ஆகாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், மக்களோடு பயணித்தால் மட்டுமே அவர்கள் உங்களை திரும்பிப் பார்ப்பார்கள் எனவும் அவர் பேசியுள்ளார்.

News November 23, 2025

விலை கிடுகிடு உயர்வு.. மக்கள் அதிர்ச்சி

image

TN-ல் தக்காளி, கத்திரிக்காய், சின்ன வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் இன்று மொத்த விலையில் 1 கிலோ தக்காளி ₹50 – ₹60-க்கும், சில்லறை விற்பனையில் ₹80 – ₹100 வரை விற்பனையாகிறது. அதேபோல், சாம்பார் வெங்காயம் கிலோ ₹70 – ₹80, கத்தரிக்காய் ₹50 – ₹70-க்கு விற்பனையாகிறது. கூட்டுறவு பண்ணை பசுமை கடைகளில் தக்காளி கிலோ ₹58-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

error: Content is protected !!