News March 30, 2025
என்னை மிக உயர்ந்தவளாக கருதவில்லை: ஜோதிகா

நடிப்பை புறந்தள்ளிவிட்டு குழந்தைகளை வளர்த்தது பற்றி நடிகை ஜோதிகா பதிலளித்துள்ளார். குழந்தைகளின் மழலைப் பருவத்தில் அவர்களுடன் இருக்க வேண்டியது ஒரு தாயின் கடமை. அதைதான் நானும் செய்தேன். அதை பெருந்தன்மை என சிலர் கூறுகிறார்கள். பெருந்தன்மையாக இருப்பது ஒன்றும் தியாகம் கிடையாது. அது நமது நற்பண்பு மட்டுமே. என்றைக்கும் நான் என்னை உயர்ந்தவளாக கருதியது கிடையாது என ஜோதிகா கூறியுள்ளார்.
Similar News
News January 17, 2026
ஆட்சியில் பங்கு கேட்டாரா ராகுல் காந்தி?

நீலகிரிக்கு வந்திருந்த ராகுல் காந்தி காங்., கூட்டணி பேச்சுவார்த்தை குழுவுடன் மீட்டிங் நடத்தியிருந்தார். இதில் நிர்வாகிகள் தரப்பில் ஆட்சியில் பங்கும், 3 அமைச்சர்கள் பதவியும், அதிக தொகுதிகளையும் ஒதுக்க வேண்டும் என்ற் கோரிக்கைகள் வலுத்ததாம். இதற்கு ராகுல் காந்தி மறுப்பு தெரிவிக்கவில்லை என உள்விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் ராகுலும் அதே முடிவில்தான் இருக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
News January 17, 2026
‘ஜன நாயகன்’ பட ரிலீஸ்.. புதிய அப்டேட் வந்தது

விஜய்யின் ‘ஜன நாயகன்’ திரைப்பட சென்சார் விவகாரத்தில் ஜன.20-ம் தேதி <<18862962>>ஐகோர்ட் <<>>முடிவெடுக்க SC உத்தரவிட்டது. ஒருவேளை அன்று சென்சார் கொடுக்க உத்தரவிட்டால், குடியரசுத் தினத்தையொட்டி ஜன.24-ம் தேதி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஜன.24 முதல் 26 வரை தொடர்ந்து 3 நாள்கள் விடுமுறை வருகிறது; இதை பயன்படுத்திக்கொள்ள படக்குழு இம்முடிவை எடுத்துள்ளதாம்.
News January 17, 2026
EPS காலில் விழுந்த பாமக MLA

சேலத்தில் அதிமுக சார்பில் நடந்த பொங்கல் விழாவில் பங்கேற்க வந்த EPS-க்கு பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்த பாமக MLA சதாசிவம், திடீரென்று அவரது காலில் விழுந்து கும்பிட்டார். ஆனால், அதை கண்டுகொள்ளாமல், EPS எதிரில் இருந்த நிர்வாகிகளிடம் பேசிக் கொண்டிருந்தார். இதுதொடர்பான போட்டோ SM-ல் வெளியான நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட MLA, காலில் விழுவது சரியா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.


