News March 30, 2025

என்னை மிக உயர்ந்தவளாக கருதவில்லை: ஜோதிகா

image

நடிப்பை புறந்தள்ளிவிட்டு குழந்தைகளை வளர்த்தது பற்றி நடிகை ஜோதிகா பதிலளித்துள்ளார். குழந்தைகளின் மழலைப் பருவத்தில் அவர்களுடன் இருக்க வேண்டியது ஒரு தாயின் கடமை. அதைதான் நானும் செய்தேன். அதை பெருந்தன்மை என சிலர் கூறுகிறார்கள். பெருந்தன்மையாக இருப்பது ஒன்றும் தியாகம் கிடையாது. அது நமது நற்பண்பு மட்டுமே. என்றைக்கும் நான் என்னை உயர்ந்தவளாக கருதியது கிடையாது என ஜோதிகா கூறியுள்ளார்.

Similar News

News April 1, 2025

லக்னோ அணி முதலில் பேட்டிங்

image

லக்னோவில் இன்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்கவுள்ளது. இப்போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டிவி சேனல்களிலும், ஜியோ ஹாட்ஸ்டார் செயலியிலும் நேரலையாக காணலாம்.

News April 1, 2025

ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் அவகாசம் தெரியுமா?

image

ரயிலில் உடனடி டிக்கெட், முன்பதிவு டிக்கெட், தட்கல் டிக்கெட் என பல டிக்கெட்டுகள் உள்ளன. இதில் பயணத் தேதியை திட்டமிட்டு முன்கூட்டி டிக்கெட்டை முன்பதிவு செய்ய ரயில்வே வசதி அமலில் உள்ளது. இந்த டிக்கெட்டை இந்தியர்கள் எனில் பயணத் தேதிக்கு 60 நாட்களுக்கு முன்பு இணையதளத்திலோ, டிக்கெட் கவுண்டர் மூலமோ முன்பதிவு செய்யலாம். வெளிநாட்டினர் எனில் 365 நாட்களுக்கு முன் முன்பதிவு செய்யலாம்.

News April 1, 2025

நடிகை தாபா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்குப்பதிவு

image

அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஷர்மிளா தாபா. நேபாளியான அவர், தமிழகத்தை சேர்ந்த நடன உதவி இயக்குனர் ரகுவை திருமணம் செய்து சென்னையில் வசிக்கிறார். பாஸ்போர்ட் நீட்டிப்புக்காக விண்ணப்பித்தபோது, புதிய முகவரியை கொடுத்துள்ளார். இதில் முறைகேடு இருப்பதாக கூறி உள்துறை அமைச்சகம் புகார் அளிக்கவே, பாஸ்போர்ட் மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளில் சென்னை போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

error: Content is protected !!