News April 7, 2024
24 மணிநேரமும் இதற்காக உழைத்து வருகிறேன்

வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் வளர்ந்த பாரதம் என்ற கனவிற்காக செலவிடுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் பிரசாரம் செய்த அவர், 2047 என்ற இலக்கிற்காக 24/7 உழைத்து வருவதாக கூறினார். மத்திய அரசு வலுவாக இருந்தால்தான் உலக நாடுகளுக்கு நம் மீது நம்பிக்கை வரும். மேலும், திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் இம்மாநிலத்தில் மகளிருக்கு நிகழும் அநீதிகளை நாடு பார்த்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
Similar News
News August 27, 2025
காங்., TVK-க்கும் கள்ள உறவு இருக்கா? எச்.ராஜா

மதுரை, TVK மாநாட்டில் பேசிய விஜய் கச்சத்தீவை இந்தியாவுக்கு பெற்று தரவேண்டும் என தெரிவித்தார். இதுபற்றி பேசிய எச்.ராஜா, விஜய் கொஞ்சமாவது அரசியல் தெரிந்துகொண்டு பேச வேண்டுமென என கூறினார். மேலும், 1974-ல் கச்சத்தீவை தானம் செய்தது காங்., அரசு, கள்ள மவுனம் காத்தது திமுக. இதற்காக காங்கிரஸை ஏன் விஜய் கண்டிக்கவில்லை என கேட்டார். இதன்மூலம் காங்., தவெகவுக்கும் கள்ள உறவு உள்ளதா எனவும் கேள்வி எழுப்பினார்.
News August 27, 2025
பிரபல நடிகர் காலமானார்

பிரபல நடிகரும், அரசியல் தலைவருமான ஜாய் பானர்ஜி(62) காலமானார். மேற்கு வங்கத்தை சேர்ந்த இவர், புகழ்பெற்ற மிலன் திதி, நாக்மதி, சாப்பார் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பாஜகவில் இணைந்த இவர், 2014 லோக்சபா தேர்தலில் பிர்பும் தொகுதி, 2019 தேர்தலில் உலுபேரியா தொகுதியில் BJP சார்பில் போட்டியிட்டு TMC-யிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். ஜாய் பானர்ஜி மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP
News August 27, 2025
₹500 கோடி இழப்பு.. தவிப்பில் திருப்பூர் நிறுவனங்கள்!

இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதியில் 68% திருப்பூரில் இருந்தே நடக்கிறது. இந்நிலையில் டிரம்ப் விதித்த 50% வரியால் பின்னலாடை நிறுவனங்களுக்கு தினசரி ₹500-₹700 கோடி வரை உடனடி இழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், ₹4,000 கோடி மதிப்பிலான ஆடைகள் தேங்கி கிடப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்காவுடன் இந்த வரியை நீக்க பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென பின்னலாடை உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.