News January 1, 2025

ஸ்டாலினுக்காக குரல் கொடுத்தவன் நான்: சீமான்

image

அண்ணா பல்கலை. வன்கொடுமை விவகாரத்தை முன்வைத்து இன்று நாதக சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு சீமான் பேசுகையில், ஒரு வயதான அம்மா, ஏதோ கோபத்தில் உங்க (ஸ்டாலின்) போஸ்டர் மீது செருப்பு வீசியதற்காக அவரை பிடிக்க போலீஸ் படையே புறப்பட்டுள்ளது. கர்நாடகாவில் உங்க போஸ்டர் அவமதிக்கப்பட்டதே.. அப்போ ஏன் நீங்க கோபப்படல. அன்று உங்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவன் நான் மட்டும்தான் எனக் கூறினார்.

Similar News

News December 9, 2025

இண்டிகோ பிரச்னை எப்போது தீரும்? அமைச்சர் விளக்கம்

image

இண்டிகோ பிரச்னை சீராகி வருவதாக மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். லோக்சபாவில் பேசிய அவர், விமானங்களின் ரத்து, தாமதம் கணிசமாக குறைந்துள்ளதாகவும், விரைவில் நிலைமை முழுவதும் சீராகும் என்றும் குறிப்பிட்டார். விசாரணைக்கு பின் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த அவர், ரீபண்ட், பேகேஜ்களை வழங்குவது, பயணிகள் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார்.

News December 9, 2025

விஜய் குறிப்பிட்ட ‘வகையறா’ என்றால் என்ன?

image

தமிழகத்தையும், புதுச்சேரியையும் பிரித்து பார்க்கும் ‘வகையறா’ நாம் அல்ல என விஜய் இன்று பரப்புரையில் பேசியிருந்தார். இந்த வகையறா என்ற சொல், பெருமளவில் தென்மாவட்டங்களில் பயன்படுத்தப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட சமூகம், ஒரு வம்சம், குலதெய்வ வழிபாடு முதலியவற்றின் அடிப்படையில் வகையறா என்ற பெயர் வழங்கப்படுகிறது. மேலும் அகராதியின்படி, வகையறா என்றால் முதலியன, தொடர்புடையவர்கள் என்றும் பொருள்படும்.

News December 9, 2025

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரிய விஜய்

image

மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தே, விஜய் தனது பரப்புரையை தொடங்கினார். மத்திய அரசுக்கு இருப்பதுபோல் தமிழகம் தனி மாநிலம், புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்ற வேறுபாடு தனக்கு கிடையாது என விஜய் கூறியுள்ளார். மக்கள் சந்திப்பில் பேசிய அவர், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி 16-வது முறையாக தீர்மானம் அனுப்பியும், மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என அவர் விமர்சித்தார்.

error: Content is protected !!