News April 11, 2024
தேர்தல் பறக்கும் படை எவ்வாறு செயல்படுகிறது?

தேர்தல் நடத்தை விதி அமலானதும் ரூ.50,000க்கு மேல் மதிப்புள்ள ரொக்கம் அல்லது பொருள்களை கொண்டு செல்வதை பறக்கும் படை அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். ஆவணங்கள் முறையாக இல்லாவிட்டால் அவை பறிமுதல் செய்யப்படும். அதே போல பணப்பட்டுவாடா தொடர்பான புகார் கிடைத்ததும் பறக்கும் படைகள் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்லும். பிறகு 50 நிமிடங்களுக்குள் உதவி தேர்தல் அலுவலருக்கு பறக்கும் படை அறிக்கை அளிக்கும்.
Similar News
News February 7, 2026
விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வெற்றி: PM

உலகக்கோப்பையை வென்றுள்ள U 19 அணி குறித்து பெருமை கொள்வதாக PM மோடி தெரிவித்துள்ளார். இந்த தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ள அவர், இந்த வெற்றி பல இளம் விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகமாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதேபோல் CM ஸ்டாலின், EPS உள்ளிட்டோரும் இந்திய அணிக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
News February 7, 2026
காங்கிரஸ் இருந்தால் அது மதச்சார்பற்ற கூட்டணி: கார்த்தி

தமிழகத்தில் 1967-க்கு பிறகு தனித்து நின்று வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் நிலையில் காங்கிரஸ் இல்லை என்பதை ஏற்றுக்கொள்வதாக கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். பிரவீன் சக்கரவர்த்தி கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், காங்கிரஸ் இருந்தால்தான் அது மதச்சார்பற்ற கூட்டணி; காங்கிரஸ் கட்சியை வெறும் கூட்டலாக மட்டும் பார்க்காமல், பெருக்கலாக பார்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
News February 7, 2026
ராசி பலன்கள் (07.02.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.


