News August 19, 2024
இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்கும்

தமிழகத்தில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என RMC எச்சரித்துள்ளது. திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், தி.மலை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது. தொடர்ந்து, குமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை, நீலகிரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
Similar News
News April 2, 2026
பெரம்பூர் ஸ்டார் தொகுதியா? திலகபாமா பதில்

ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவனாக யாரும் வரக்கூடாது என நினைக்கும் திமுக அரசு அழித்தொழிக்கப்பட வேண்டும் பெரம்பூர் பாமக வேட்பாளர் திலகபாமா கூறியுள்ளார். வேட்புமனு தாக்கலுக்கு பின் பேசிய அவர், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி கேட்டும், பெரம்பூரை மாற்றவும்தான் இங்கு போட்டியிடுகிறேன் என தெரிவித்துள்ளார். விஜய் குறித்த கேள்விக்கு, மக்களுக்கு எல்லா வசதியும் கிடைத்தால்தான் அது ஸ்டார் தொகுதி எனவும் பேசியுள்ளார்.
News April 2, 2026
‘நான் சாகப் போகிறேன்.. மன்னிச்சிருங்க’

குற்ற உணர்ச்சி ஒரு உயிரை குடித்த சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது. பிரதீபா(29) மாடிக்குச் சென்ற நேரத்தில், வீட்டில் இருந்த அவரது 11 மாத குழந்தை வாளித் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தது. தனது அலட்சியமே குழந்தையின் இறப்புக்கு காரணம் என்ற குற்ற உணர்ச்சியில் இருந்த பிரதீபா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கணவரிடம் மன்னிப்பு கேட்டு அவர் எழுதிய கடிதத்தை மீட்டு போலீஸ் விசாரித்து வருகிறது.
News April 2, 2026
இந்திய தேர்தல் வரலாற்றில் இடம் பெற்ற மொடக்குறிச்சி!

1996-ல் மொடக்குறிச்சி தொகுதியில் 1,033 வேட்பாளர்கள் போட்டியிட்டது இந்தியாவில் அபூர்வமான நிகழ்வாகும். விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விவசாய சங்கங்கள் இதனை செய்தன. 65 பக்க வாக்குச்சீட்டு தேவைப்பட்டதால் இத்தொகுதியில் ஒரு மாதத்திற்கு வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கு பிறகு, வேட்பாளர்களுக்கு வைப்புத்தொகையை உயர்த்த தேர்தல் ஆணையம் சீர்திருத்தம் செய்தது கவனிக்கத்தக்கது.


