News May 4, 2024
பிரேசிலை புரட்டிப் போட்ட கனமழை

தென் அமெரிக்க நாடான பிரேசிலின் ரியோ கிராண்டே டோ சுல் மாகாணத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள நகரங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்துள்ளன. இதுவரை 39 பேர் பலியான நிலையில், 70 பேரை காணவில்லை எனக் கூறப்படுகிறது. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனிடையே, வீடுகளை இழந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News January 30, 2026
வரதட்சணை.. Dumbbells-ஆல் அடித்து கொன்ற கணவன்!

டெல்லி SWAT கமாண்டோ காஜல் சௌத்ரியை (27), கணவர் அங்கூர் Dumbbell-ஆல் அடித்து கொலை செய்துள்ளார். 2023-ல் திருமணமான நிலையில், வரதட்சணை தகராறு இருந்துள்ளது. கடந்த 22-ம் தேதி காஜல் சகோதருடன் போனில் பேசிய போது, போனை பறித்த அங்கூர், ‘உன் சகோதரியை கொல்லப் போறேன்’ என கூறி காஜலை அடித்துள்ளார். இதில், பலத்த காயமடைந்த காஜல், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மரணித்த போது அவர் 4 மாத கர்ப்பமாக இருந்துள்ளார்.
News January 30, 2026
உள்ளாடையுடன் போட்டோ ஷூட்டுக்கு NO சொன்ன நடிகை

போட்டோஷூட் என்ற சிலர் தன்னிடம் அநாகரிகமாக நடந்து கொண்டது குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பகிர்ந்து கொண்டுள்ளார். போட்டோ எடுக்க சென்ற ரூமிற்குள் இருந்த மூவர் தன்னை ‘Lingerie’ அணியும் படி வற்புறுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவர்களிடம் மறுப்பு தெரிவித்துவிட்டு வெளியே வந்து விட்டதாகவும், தற்போதும் அச்சம்பவத்தின் தாக்கத்தில் இருந்து மீள முடியவில்லை எனவும் வருத்தம் தெரிவித்துள்ளார்.
News January 30, 2026
MGR போல விஜய் களத்தில் செயல்படவில்லை: செல்லூர்

விஜய் அறையில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்வதாக செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். மேலும், விஜய்யை நாங்கள் திட்டவில்லை, ஆனால் அவர் எங்களை திட்டினால் அமைதியாக இருக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார். கரூர் நெரிசலில் இறந்தவர்களின் குடும்பத்தை நேரில் அழைத்து ஆறுதல் கூறுவதெல்லாம் புதிதாக இருப்பதாகவும் அவர் சாடியுள்ளார். MGR போல விஜய் களத்தில் இறங்கி அரசியல் செய்யவில்லை என்றும் விமர்சித்துள்ளார்.


