News May 4, 2024
பிரேசிலை புரட்டிப் போட்ட கனமழை

தென் அமெரிக்க நாடான பிரேசிலின் ரியோ கிராண்டே டோ சுல் மாகாணத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள நகரங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்துள்ளன. இதுவரை 39 பேர் பலியான நிலையில், 70 பேரை காணவில்லை எனக் கூறப்படுகிறது. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனிடையே, வீடுகளை இழந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News November 14, 2025
பிஹார் வெற்றி WB-லிலும் தொடரும்: கிரிராஜ் சிங்

பிஹாரில் NDA கூட்டணி 191 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், இந்த வெற்றி பாஜகவுக்கே உரியது என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியுள்ளார். இந்த வெற்றி, தற்போது அராஜக ஆட்சி நடைபெறும் மே.வங்கத்திலும் தொடரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். CM மம்தா பானர்ஜி தலைமையிலான TMC ஆட்சி நடைபெறும் அம்மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.
News November 14, 2025
நீரிழிவு நோயை உண்டாக்கும் 7 பழக்கங்கள்!

இந்த பழக்கங்களின் மூலம் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் வரலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர் ✦காலை நேர உணவை தவிர்ப்பது ✦ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பது ✦குறைவான நேரம் தூங்குவது அல்லது முறையாக தூங்கும் பழக்கம் இல்லாதது ✦அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவை உட்கொள்வது ✦அதிக சர்க்கரையுள்ள பானங்கள் பருகுவது ✦உடல்பயிற்சியின்மை ✦அதிக மன அழுத்தம். இப்பதிவை அதிகளவில் பகிரவும்.
News November 14, 2025
கண்ணீருடன் உதயநிதி நேரில் அஞ்சலி

உதயநிதியின் நண்பரும், அவரின் டிரைவருமான பாலாவின் தந்தை ரவி, உடல்நலக்குறைவால் தனியார் ஹாஸ்பிடலில் உயிரிழந்தார். இந்த செய்தியை கேட்டு வேதனையடைந்த உதயநிதி, முதல் ஆளாக ஹாஸ்பிடலுக்கு நேரில் சென்று, ரவியின் உடலுக்கு மரியாதை செலுத்தினார். அப்போது, ரவியின் உடலை பார்த்ததும் அவர் கண்கலங்கி அழுதார். தற்போது திமுக முக்கிய நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


