News August 19, 2024

முன்னர் செய்ததை மறந்ததா காங்கிரஸ்?

image

அரசு பணியிடங்களை Lateral Entry மூலம் நேரடி நியமனம் செய்யும் முறையை காங்., தலைமையிலான UPA அரசு தான் கொண்டு வந்ததாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மேலும், தற்போது UPSC மூலம் வெளிப்படைத் தன்மையுடன் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, 45 பணியிடங்களுக்கான நேரடி நியமனம் குறித்த அறிவிப்பு இட ஒதுக்கீட்டை பறிக்கும் செயல் என ராகுல் காந்தி விமர்சித்து இருந்தார்.

Similar News

News February 8, 2026

QR Code மூலம் விருப்ப மனு.. புதிய பாதையில் தவெக

image

தவெக விருப்ப மனு அளிக்க தொடங்கிய நாளில், பனையூரில் பலரும் குவிந்ததால் அப்பகுதிவாசிகள் அவதிப்பட்டனர். இதனால் இணையதளம் மூலம் விருப்ப மனு அளிக்கும்படி கட்சியினருக்கு தவெக தலைமை உத்தரவிட்டது. இந்நிலையில், QR Code மூலமும் விருப்ப மனு அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவிலேயே முதல்முறையாக QR மூலம் விருப்ப மனு பெறும் கட்சி தவெக என தொண்டர்கள் கூறி மகிழ்கின்றனர். உங்கள் கருத்து என்ன?

News February 8, 2026

இன்று இதை செய்தால் தீராத கடனும் தீரும்

image

இரவு 8 – 11:30 மணிக்குள் எந்த நேரத்திலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். 4 மிளகை எடுத்துக்கொண்டு, நிலை வாசலுக்கு வெளியே வாருங்கள். குலதெய்வத்தை மனதார வேண்டி கையில் இருக்கும் மிளகை தலைக்கு இடது புறமாக 3 முறை மட்டும் சுற்றுங்கள். அதன் பிறகு, 4 மிளகையும் 4 திசைகளில் கண்ணுக்கு தெரியாமல் தூர எறிந்து விடுங்கள். அவ்வளவுதான். இப்பரிகாரத்தை 3 வாரம் தொடர்ந்து செய்தால், கஷ்டம் நீங்கும் என்பது ஐதீகம்!

News February 8, 2026

விஜய்க்கு எதிராக Edit செய்த போட்டோ வைரல்

image

தவெக கட்சி சார்ப்பில் தேர்தலுக்கான வேட்பாளர் விருப்ப மனு வழங்கும் நிகழ்வில், அக்கட்சியின் தலைவர் விஜய்யின் பெயரில் ஒரு விருப்ப மனு வழங்கப்பட்டது. அதில், விண்ணப்பதாரர் பெயர் என்று ’ஜோசப் விஜய்’ என்ற பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் தொகுதி என்று எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், இதனை Edit செய்து, தொகுதி என்ற இடத்தில் ‘பனையூர்’ என்று எழுதிருப்பதாக போலியான படத்தை வைரலாகி வருகின்றனர்.

error: Content is protected !!