News October 24, 2024

கடலூரில் ஓய்வு பெற்றவர்களின் குறைகேட்பு கூட்டம்

image

கடலூர் மாவட்டத்தில் அரசுத் துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களின் குறைகள் கேட்பு கூட்டம் கடலூரில் 22.11.2024 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடக்க உள்ளது. அதனால் ஓய்வுபெற்றவர்கள் தங்களது கோரிக்கைகளை 2 பிரதிகளில் “ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் மனு” என குறிப்பிட்டு 30.10.2024-க்குள் ஆட்சியர் அலுவலகத்திற்கு தபால் அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

Similar News

News July 8, 2025

கடலூர்: கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கைது

image

கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் பகுதியில் கேட்டை மூடாததால் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்ததையடுத்து மத்திய பிரதேசத்தை சேர்ந்த கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை காவல் துறையினர் தற்போது கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது மட்டுமில்லாமல் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

News July 8, 2025

கடலூர் ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 3-ஆக உயர்வு

image

கடலூர் அருகே இன்று பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சாருமதி (15), விமலேஷ் (10) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் அனுப்பிவைக்கப்பட்ட மாணவர் செழியனும் (14) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அக்கா-தம்பி விபத்தில் உயிரிழந்தது கடலூர் மாவட்டத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

News July 8, 2025

கடலூர் ரயில் விபத்து: ரூ.5 லட்சம் நிவாரணம் – முதல்வர்

image

கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் விபத்து குறித்து தனது இரங்கலை தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரணம் அறிவித்துள்ளார். இதேபோல ரயில்வே நிர்வாகமும் விபத்தில் உயிரிழந்தோருக்கு நிவாரணம் அறிவித்துள்ளது.

error: Content is protected !!