News October 24, 2024
கடலூரில் ஓய்வு பெற்றவர்களின் குறைகேட்பு கூட்டம்

கடலூர் மாவட்டத்தில் அரசுத் துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களின் குறைகள் கேட்பு கூட்டம் கடலூரில் 22.11.2024 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடக்க உள்ளது. அதனால் ஓய்வுபெற்றவர்கள் தங்களது கோரிக்கைகளை 2 பிரதிகளில் “ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் மனு” என குறிப்பிட்டு 30.10.2024-க்குள் ஆட்சியர் அலுவலகத்திற்கு தபால் அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
Similar News
News December 29, 2025
கடலூர்: டிப்ளமோ போதும்.. அரசு வேலை ரெடி

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் காலியாக உள்ள Laboratory Assistant, Senior Ship Draftsman பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 132
3. வயது: 18 – 35
4. சம்பளம்: ரூ 22,500 – ரூ 77,000/-
5. கல்வித்தகுதி: டிப்ளமோ, பட்டப்படிப்பு
6. கடைசி தேதி: 12.01.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க!
News December 29, 2025
கடலூர்: போலி நகைகள்-எஸ்.பி எச்சரிக்கை!

கடலூர் மாவட்டத்தில் நகை அடகு பிடிக்கும் பேங்க்கர்ஸ் மற்றும் அடகு கடை உரிமையாளர்கள் நகை ஒரிஜினலா என்பதை நகை மதிப்பீட்டாளர் மூலம் தெரிந்து கொண்ட பின்னரே நகைக்கு பணம் கொடுக்க வேண்டும் என எஸ்.பி ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், ஆதார் கார்டில் உள்ள போட்டோ, வந்திருப்பவரின் முகத்துடன் சரியாக உள்ளதா எனவும், ஆதார் கார்டு உண்மைதானா எனவும் நன்கு விசாரித்து பணம் வழங்க அறிவுறுத்தியுள்ளார்.
News December 29, 2025
கடலூர்: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதே போன்று, A.26,B.26,C.26,D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec)
இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!


