News October 24, 2024
கடலூரில் ஓய்வு பெற்றவர்களின் குறைகேட்பு கூட்டம்

கடலூர் மாவட்டத்தில் அரசுத் துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களின் குறைகள் கேட்பு கூட்டம் கடலூரில் 22.11.2024 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடக்க உள்ளது. அதனால் ஓய்வுபெற்றவர்கள் தங்களது கோரிக்கைகளை 2 பிரதிகளில் “ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் மனு” என குறிப்பிட்டு 30.10.2024-க்குள் ஆட்சியர் அலுவலகத்திற்கு தபால் அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
Similar News
News January 1, 2026
கடலூர்: 16 வயது சிறுமி கர்ப்பம்!

காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த அஜித் (25). இவர் 16 வயது சிறுமியை கடந்த 5 மாதமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அஜித் சிறுமியின் வீட்டிற்கு சென்று, அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் சிறுமி கருவுற்றார். இதுகுறித்து சிறுமியின் தாய் சேத்தியாதோப்பு மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் அஜித் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 1, 2026
கடலூர்: நகை திருடிய இளைஞர் அதிரடி கைது

சிதம்பரம் அருகே நற்கவந்தன்குடியை சேர்ந்தவர் செளந்தர்ராஜன்(51). கவரிங் கடையில் வேலை பார்க்கும் இவர், ரூ.3 லட்சம் மதிப்புள்ள கவரிங் நகைகளை தனது பைக்கில் வைத்துவிட்டு, மது அருந்த டாஸ்மாக் கடைக்கு சென்றார். அப்போது, மர்மநபர் கவரிங் நகைகளை திருடி சென்று விட்டார். இது குறித்து சிதம்பரம் போலீசார் வழக்கு பதிந்து கவரிங் நகைகளை திருடிய கடலூர் புதுப்பாளையத்தை சேர்ந்த பெருமாள்(30) என்பவரை கைது செய்தனர்.
News January 1, 2026
கடலூர் மக்களே.. நீங்கள் சொல்லுங்கள்!

கடலூர் மக்களே நாம் அனைவரும் புதிய வருடத்தில் நுழைந்து விட்டோம்!. கடந்த 2025-ஆம் ஆண்டில் கடலூரில் வழக்கத்திற்கு மாறான மழை, வெயில் என வானிலை மாற்றங்களும், புதிய அரசு திட்டங்கள் கிடைக்கப்பெற்றது. இந்த சமயத்தில் நாம் அனைவரும் ஒன்றை நினைவு கூறுவோம். அதன்படி 2025ஆம் ஆண்டின் மறக்க முடியாத நினைவுகள் மற்றும் புதிய வருடத்தில் இதை செய்ய விரும்புகிறேன் என்பதை COMMENT செய்யவும். நண்பர்களுக்கு SHARE செய்யவும்!


