News October 24, 2024
கடலூரில் ஓய்வு பெற்றவர்களின் குறைகேட்பு கூட்டம்

கடலூர் மாவட்டத்தில் அரசுத் துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களின் குறைகள் கேட்பு கூட்டம் கடலூரில் 22.11.2024 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடக்க உள்ளது. அதனால் ஓய்வுபெற்றவர்கள் தங்களது கோரிக்கைகளை 2 பிரதிகளில் “ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் மனு” என குறிப்பிட்டு 30.10.2024-க்குள் ஆட்சியர் அலுவலகத்திற்கு தபால் அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
Similar News
News January 3, 2026
கடலூர்: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்
News January 3, 2026
கடலூர்: 9-ம் வகுப்பு மாணவன் ஏரியில் மூழ்கி சாவு

குறவன்குப்பத்தைச் சேர்ந்தவர் கருணாகரன் மகன் கிருபாகரன் (14). பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வரும் இவர், விடுமுறை காரணமாக நேற்று மாலை கீழ்பாதி ஏரிக்குச் நண்பர்களுடன் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது நீச்சல் தெரியாமல் ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றதால், மாணவன் தண்ணீரில் மூழ்கி மாயமானான். இதையடுத்து நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு மாணவன் சடலமாக மீட்கப்பட்டார்.
News January 3, 2026
கடலூர்: சிறுமியை தாயாக்கிய வாலிபர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியை சேர்ந்தவர் இப்ராகிம் (24). சிதம்பரத்தில் டிரைவராக வேலை செய்து வந்த இவர், 17 வயது சிறுமி ஒருவரை காதலிப்பதாக கூறி கர்பமாக்கியுளார். இதையடுத்து சிறுமிக்கு குழந்தை பிறந்த நிலையில், அவரது தாய் அளித்த புகாரின் பேரில் இப்ராகிமை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் இப்ராகிமின் குற்ற செயலை கட்டுப்படுத்தும் வகையில், அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.


