News October 24, 2024
கடலூரில் ஓய்வு பெற்றவர்களின் குறைகேட்பு கூட்டம்

கடலூர் மாவட்டத்தில் அரசுத் துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களின் குறைகள் கேட்பு கூட்டம் கடலூரில் 22.11.2024 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடக்க உள்ளது. அதனால் ஓய்வுபெற்றவர்கள் தங்களது கோரிக்கைகளை 2 பிரதிகளில் “ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் மனு” என குறிப்பிட்டு 30.10.2024-க்குள் ஆட்சியர் அலுவலகத்திற்கு தபால் அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
Similar News
News November 23, 2025
கடலூர் மாவட்டத்தில் 758.9 மி.மீ மழை பதிவு

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த மூன்று நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (நவ.23) காலை 8.30 மணி நிலவரப்படி, கொத்தவாச்சேரி 71 மி.மீ மழை, பரங்கிப்பேட்டை 61 மி.மீ மழை, சேத்தியாதோப்பு 56 மி.மீ மழை, புவனகிரி 52 மி.மீ மழை, வேப்பூர் 30 மி.மீ மழை என மாவட்டம் முழுவதும் 758.9 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
News November 23, 2025
கடலூர்: கொதிக்கும் அண்டாவில் விழந்த குழந்தை உயிரிழப்பு

காட்டுமன்னார்கோவில் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்த். இவரது 3 வயது குழந்தை சுஷாந்த் கடந்த 18ம் தேதி மாடியில் விளையாடிக் கொண்டிருந்த போது, வீட்டின் வெளியே ஹோட்டலுக்காக குருமா செய்த அண்டாவில் தவறி விழுந்துள்ளார். இதில், பலத்த காயத்துடன் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக சென்னையில் அனுமதித்தனர். இந்நிலையில், சிகிச்சை பலன் இன்றி நேற்று குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News November 23, 2025
கடலூர்: அரசு வேலை – கடைசி வாய்ப்பு!

எல்லை சாலைகள் அமைப்பில் காலியாக உள்ள Vehicle Mechanic, MSW(Painter), MSW(Driver Engine Static)542 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th, ITI
3. கடைசி தேதி : 24.11.2025
4. சம்பளம்: ரூ.20200 வரை
5. இதற்கு <
இத்தகவலை அனைவருக்கும் SHAREபண்ணி தெரியப்படுத்துங்க.


