News October 24, 2024

கடலூரில் ஓய்வு பெற்றவர்களின் குறைகேட்பு கூட்டம்

image

கடலூர் மாவட்டத்தில் அரசுத் துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களின் குறைகள் கேட்பு கூட்டம் கடலூரில் 22.11.2024 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடக்க உள்ளது. அதனால் ஓய்வுபெற்றவர்கள் தங்களது கோரிக்கைகளை 2 பிரதிகளில் “ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் மனு” என குறிப்பிட்டு 30.10.2024-க்குள் ஆட்சியர் அலுவலகத்திற்கு தபால் அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

Similar News

News November 27, 2025

கடலூரில் பயங்கரம்: வாலிபர் அடித்துக் கொலை

image

கடலூர் மஞ்சகுப்பம் லோகநாதன் நகர் பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் (37). இவர் நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் இன்று (நவ 27) அதிகாலை 3 மணி அளவில் அவரது வீட்டுக்குள் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் பால்ராஜை உருட்டு கட்டையால் அடித்துக் கொலை செய்தனர். இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார், பால்ராஜை கொலை செய்த நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

News November 27, 2025

கடலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் வரும் நவ.28-ம் தேதி முதல் நவ.30-ம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் நாளை (நவ.28) நடைபெற இருந்த விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம், ரத்து செய்யப்படுவதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!

News November 27, 2025

கடலூர்: ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் (26.11.2025) இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில், ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!