News October 24, 2024

கடலூரில் ஓய்வு பெற்றவர்களின் குறைகேட்பு கூட்டம்

image

கடலூர் மாவட்டத்தில் அரசுத் துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களின் குறைகள் கேட்பு கூட்டம் கடலூரில் 22.11.2024 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடக்க உள்ளது. அதனால் ஓய்வுபெற்றவர்கள் தங்களது கோரிக்கைகளை 2 பிரதிகளில் “ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் மனு” என குறிப்பிட்டு 30.10.2024-க்குள் ஆட்சியர் அலுவலகத்திற்கு தபால் அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

Similar News

News December 25, 2025

கடலூர்: ஒரே கருவறையில் 18 அம்மன் கொண்ட கோயில்!

image

கடலூர் அருகே காரைக்காடு பகுதியில் பச்சைவாழியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் லில் வேறெங்கும் காணாத வகையில், ஒரே கருவறையில் 18 அம்மன்களை தரிசனம் செய்யலாம். வெள்ளிக்கிழமைகளில் திருமண தடை நீக்க இங்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. கோயிலை சுற்றிலும் அனைத்து காவல் தெய்வங்களுக்கும் சுதை சிற்பங்கள் இருப்பது சிறப்பம்சமாகும். இக்கோயில் சுமார் 500 ஆண்டுகள் பழமையானது எனக் கூறப்படுகிறது. SHARE IT!

News December 25, 2025

புதிதாக 277 வாக்குச்சாவடிகள்; ஆட்சியர் தகவல்!

image

கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குச்சாவடி மையங்கள் மறு சீரமைப்பு செய்யும் பணிகள் நடைபெற்றது. முன்னதாக 2313 வாக்குச்சாவடிகள் இருந்த நிலையில், 1200 வாக்காளருக்கு மேல் உள்ள வாக்குச்சாவடி மையங்கள் பிரித்து மறுசீரமைப்பு செய்யப்பட்டு, தற்போது கூடுதலாக 277 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டது. எனவே 2590 வாக்குச்சாவடிகளாக உயர்த்தப்பட்டுள்ளதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News December 25, 2025

கடலூர்: உயிரிழந்தவர்களில் உடல்கள் ஒப்படைப்பு

image

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் தொழுதூர் அருகே நிகழ்ந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு, பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் இறுதி அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அவர்களது குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்து, உடற்கூறாய்வு முடித்து உடல்களை அனுப்பி வைத்தார். உடன் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!