News August 7, 2025

அரசு பொது விடுமுறை: ஆக.15-ல் கிராம சபைக் கூட்டம்

image

அனைத்து ஊராட்சிகளிலும் வரும் 15-ம் தேதி சுதந்திர தின விடுமுறை தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடத்த கலெக்டர்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார். இதில், தூய்மையான குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். அந்தந்த பகுதியில் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்று உங்கள் ஊர் பிரச்னைகள், வரவு செலவு கணக்குகளை தெரிந்து கொள்ளுங்கள் மக்களே..!

Similar News

News March 5, 2026

CM காட்டிய வைரல் சைகை.. அவரே விளக்கமளித்துள்ளார்

image

நீண்ட இழுபறிக்கு பின் காங்., கூட்டணி டீலை முடித்துவிட்டு வெளியே வந்த ஸ்டாலின் “All Finish” என்பதைபோல சைகை காட்டினார். இது பட்டிதொட்டி எங்கும் வைரலாக இதற்கு தஞ்சையில் ஒரு விழாவில் பங்கேற்ற அவர் விளக்கமளித்திருக்கிறார். அந்த சைகையை வேண்டுமென்றே செய்யவில்லை என கூறிய அவர், செய்தியாளர்கள் தொகுதி பங்கீடு இறுதியானதா என கேட்டதற்கு தான் அப்படி சைகையால் முடிந்துவிட்டது என கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

News March 5, 2026

2,551 பணியிடங்கள், ₹45,000 சம்பளம்.. APPLY NOW

image

AIIMS-ல் 2,551 Nursing Officer பணியிடங்கள் காலியாக உள்ளன. ➤கல்வி தகுதி: B.Sc. Nursing ➤சம்பளம்: மாதம் ₹44,900 முதல் ₹1,42,400 வரை கிடைக்கும் ➤வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை ➤தேர்வு செய்யும் முறை: Preliminary Exam, Mains Exam (Computer Based Test) ➤விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: பிப்.24 ➤விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 16 ➤விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். SHARE.

News March 5, 2026

CM பதவியிலிருந்து விலகுவதாக நிதிஷ்குமார் அறிவிப்பு

image

நிதிஷ்குமார் பிஹார் CM பதவியில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார். ஆரம்பத்தில் இருந்தே தனக்கு MP ஆக ஆசை இருந்ததாக கூறிய அவர், அதற்காகவே தற்போது CM பதவியை விடுத்து ராஜ்யசபா MP-ஆக போட்டியிடவுள்ளதாக கூறியுள்ளார். மேலும், புதிய ஆட்சிக்கு முழு ஆதரவு அளிப்பேன் என உறுதியளித்துள்ளார். இந்நிலையில், கடந்த நவம்பரில் 10-வது முறையாக CM ஆன இவர் இப்படி அறிவித்ததற்கு தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!