News August 7, 2025

அரசு பொது விடுமுறை: ஆக.15-ல் கிராம சபைக் கூட்டம்

image

அனைத்து ஊராட்சிகளிலும் வரும் 15-ம் தேதி சுதந்திர தின விடுமுறை தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடத்த கலெக்டர்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார். இதில், தூய்மையான குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். அந்தந்த பகுதியில் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்று உங்கள் ஊர் பிரச்னைகள், வரவு செலவு கணக்குகளை தெரிந்து கொள்ளுங்கள் மக்களே..!

Similar News

News August 7, 2025

திருமணமாகாதவர்களுக்கு ₹1.5 லட்சம் சம்பளத்தில் வேலை!

image

இந்திய ராணுவத்தில் 350 Technical காலியிடங்களை(Short Service) நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 21-27 வயதுக்குட்பட்ட என்ஜினியரிங் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். முக்கிய கண்டிஷன் திருமணமாகாதவராக இருக்க வேண்டும். பதவிக்கேற்ப மாதம் ₹56,000- ₹1.5 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு வரும் ஆகஸ்ட் 22-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு தகவலுக்கு <>இங்கே <<>>கிளிக் செய்யவும்.

News August 7, 2025

இளம் பெண் தற்கொலை.. கணவர் குடும்பத்தோடு கைது

image

திருப்பூரில் ரிதன்யாவை போல் வரதட்சணை கொடுமையால் திருமணமான 11 மாதங்களில் பிரீத்தி என்ற இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரதட்சணையாக 120 பவுன் நகை, ₹25 லட்சம் ரொக்கம், சொகுசு கார் கொடுக்கப்பட்ட நிலையில், கூடுதலாக ₹50 லட்சம் கேட்டு கணவர் குடும்பத்தினர் கொடுமை செய்துள்ளனர். இதனால், அவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், கணவரின் குடும்பத்தை போலீசார் கைது செய்தனர்.

News August 7, 2025

ஆசிய கோப்பை: பும்ரா அவுட்.. ரிஷப் பண்ட் டவுட்!

image

Asia Cup-க்கான அணி தேர்வு சூடுபிடித்துள்ளது. ENG தொடரில் காயமடைந்த பண்ட் & Work Load காரணமாக பும்ராவும் விளையாட மாட்டார்கள் என கூறப்படுகிறது. கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்படுவார் என்றும், சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் கண்டிப்பாக இடம் பிடிப்பார்கள் என தகவல் வெளிவந்துள்ளது. நீங்க பெஸ்ட் பிளேயிங் XI சொல்லுங்க?

error: Content is protected !!