News March 23, 2025
போராட்டத்தில் குதித்த அரசு ஊழியர்கள்.. அரசுக்கு நெருக்கடி

பழைய ஓய்வூதிய திட்டம் அமல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மாநிலம் முழுவதும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் அகில இந்திய செயலாளர் அண்ணாமலை கூறுகையில், திமுக தலைவராக இருந்த கருணாநிதி தன்வசம் வைத்திருந்த அரசு ஊழியர் வாக்கு வங்கியை, மகன் ஸ்டாலின் இழந்து விட்டார் என்று விமர்சித்துள்ளார்.
Similar News
News March 25, 2025
தினமும் காலையில் பீட்ரூட் ஜூஸ் குடிங்க

▶ரத்த அணுக்கள் உற்பத்தியை தூண்டுவதோடு, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும். ▶மூளைக்கு ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதுடன், ஆக்ஸிஜனேற்றத்தை அதிகரிக்க உதவும். ▶ரத்த நாளங்களை விரிவுபடுத்தும், ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும், ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.
▶ இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவும். ▶ குறிப்பாக, செரிமானத்திற்கு உதவும்.
News March 25, 2025
சவுக்கு சங்கர் வீடு சூறை: வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

யூடியூபர் சவுக்கு சங்கரின் வீடு சூறையாடப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. தூய்மை பணியாளர் குறித்து அவதூறாக பேசியதாக கூறி அவரது வீட்டில் நுழைந்த சிலர் பொருட்களை சூறையாடினர். இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், டிஜிபி சங்கர் ஜிவால் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.
News March 25, 2025
மார்ச் 25: வரலாற்றில் இன்றைய தினம்

1927 – புதுவை முன்னாள் முதல்வர் ப. சண்முகம் பிறந்த தினம்.
1947 – அமெரிக்காவில் நிலக்கரிச் சுரங்க விபத்தில் 111 பேர் உயிரிழந்தனர்.
1954 – முதல் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை ஆர்சிஏ நிறுவனம் வெளியிட்டது.
1992 – ரஷ்ய வீரர் செர்கே கிரிக்காலொவ் மீர் 10 மாதங்களுக்கு பிறகு விண்வெளி நிலையத்தில் இருந்து பூமி திரும்பினார்.