News August 9, 2025
இந்திய அணிக்கு குட் நியூஸ்

இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் காயத்தில் இருந்து மீண்டுவிட்டதாக தெரிகிறது. இதனால், அடுத்த மாதம் தொடங்க உள்ள ஆசிய கோப்பை தொடரில் அவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் பயிற்சியில் ஈடுபடும் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. முன்னதாக, ஜெர்மனியில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவர் NCA-ல் டாக்டர்கள் கண்காணிப்பில் இருப்பில் இருக்கிறார்.
Similar News
News August 9, 2025
போலி வாக்காளர்களால் திமுக வெற்றி: இபிஎஸ் சாடல்

போலி வாக்காளர்களால் தான் சென்னை மாநகராட்சியில் திமுக வெற்றி பெறுவதாக இபிஎஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். மாநகராட்சி தேர்தலில் கள்ள ஓட்டு போட முயன்றவரை ஜெயக்குமார் பிடித்து கொடுத்ததாகவும், ஆர்.கே.நகர், பெரம்பூர் தொகுதிகளில் அதிமுகவின் முயற்சியில் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், திமுகதான் போலி வாக்காளர்களை சேர்ப்பதில் மும்முரமாக இருப்பதாகவும் சாடியுள்ளார்.
News August 9, 2025
கோபம் தான் சிராஜின் ஆயுதம்: ரஹானே

சிராஜின் கோபமும், ஆதிக்கம் செலுத்தும் மனப்பான்மையும் அவரை இன்னும் சிறப்பாக பவுலிங் செய்ய வைக்கும் என ரஹானே தெரிவித்துள்ளார். தன்னுடைய கேப்டன்சியில் 2020-21 பார்டர் கவாஸ்கர் தொடரில் தான் டெஸ்ட்டில் சிராஜ் அறிமுகமானதாகவும், அவரை லேட்டாக பவுலிங் வீச வைத்ததற்கு கோபபட்டதாகவும் ரஹானே நினைவுகூர்ந்துள்ளார். மேலும், அதே கோபம் இங்கிலாந்து தொடரிலும் எதிரொலித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
News August 9, 2025
டிரம்ப் – புடின் சந்திப்பு தேதி உறுதியானது

அமெரிக்க அதிபர் டிரம்ப் வரும் 15-ம் தேதி ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். வட அமெரிக்காவில் உள்ள அலாஸ்காவில் இருவரும் சந்திக்க உள்ளனர். இந்த சந்திப்பின் போது ரஷ்யா- உக்ரைன் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைனை நேட்டோவில் இணைக்கக் கூடாது மற்றும் நேட்டோ படைகளை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதே ரஷ்யாவின் கோரிக்கையாக உள்ளது.