News April 24, 2025

தங்கம் விலை தொடர்ந்து 2-வது நாளாக சரிவு

image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்.24) சவரனுக்கு ₹80 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹9,005-க்கும், சவரன் ₹72,040-க்கும் விற்பனையாகிறது. நேற்று சவரனுக்கு ₹2,200 குறைந்த நிலையில், தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவைக் கண்டுள்ளது. அதேநேரம் வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ₹111-க்கும், பார் வெள்ளி கிலோ ₹1,11,000-க்கும் விற்பனையாகிறது.

Similar News

News April 24, 2025

நடிகைகள் ரேப்: இயக்குநர் மீதான வழக்கு மறுவிசாரணை

image

ME TOO விவகாரம் எழுந்தபோது, ஹாலிவுட் இயக்குநர் ஹார்வி வெயின்ஸ்டன் மீது நடிகைகள் உள்ளிட்ட சுமார் 80 பேர் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட புகார்களைத் தெரிவித்திருந்தனர். இதுதொடர்பான வழக்கில் 2020-ல் அவருக்கு 23 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் மேலும் 2 பேர் தெரிவித்த புகார்கள் அடிப்படையில் வழக்கு மீது மறுவிசாரணை எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஹார்வி வெயின்ஸ்டன் வீல் சேரில் வந்து ஆஜரானார்.

News April 24, 2025

நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம்.. பாக்.கிற்கு என்ன பாதிப்பு? (1/2)

image

நேரு-அயூப்கான் முன்னிலையில் உலக வங்கி மத்தியஸ்தத்துடன் 1960-ல் இந்தியா, பாக். இடையே சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, கிழக்கு நதிகளான சட்லஸ், பீயாஸ், ராவி நதிநீர் அனைத்தும் இந்தியாவுக்கும், சிந்து, ஜீலம், செனாப் நதிநீர் பாகிஸ்தானிற்கும் என தீர்மானிக்கப்பட்டது. இதன்மூலம் 33 மில்லியன் ஏக்கர் இந்திய விவசாய நிலமும், 135 மில்லியன் ஏக்கர் பாகிஸ்தான் விவசாய நிலமும் பயனடையும்.

News April 24, 2025

நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம்.. பாக்.கிற்கு என்ன பாதிப்பு? (2/2)

image

மேடான இந்திய பகுதிகளில் உருவாகி கீழ்நோக்கி வரும் இந்நதிகளின் நீரையே பாகிஸ்தான் விவசாயிகள் அதிகம் நம்பி உள்ளனர். பாகிஸ்தானில் குடிநீருக்கும் இந்நீரே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மனிதாபிமான அடிப்படையில் இந்நீரை இந்தியா வழங்கி வந்தது. தீவிரவாதத்தை தூண்டிவிடுவதை நிறுத்தாததால், தற்போது இந்தியா நிறுத்தி வைத்துள்ளது. இதனால் பாகிஸ்தானின் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

error: Content is protected !!