News April 7, 2024
கஞ்சாவை காணவில்லை! எலிகள் மீது குற்றச்சாட்டு

ஜார்க்கண்டின் தன்பாத் பகுதியில் 9 கிலோ கஞ்சா உள்பட 19 கிலோ போதைப்பொருள்களை 2018ஆம் ஆண்டு பறிமுதல் செய்த போலீசார், இருவரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கில் பறிமுதல் செய்த போதைப்பொருள்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால், பறிமுதல் செய்யப்பட்ட 9 கிலோ கஞ்சா உட்பட 19 கிலோ போதைப்பொருள்களையும் எலிகள் திண்றுவிட்டதாக போலீசார் பதில் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
Similar News
News August 12, 2025
விஜய்யை நேரடியாக சாடிய திருமாவளவன்

தலித் மக்களுக்கு எதிராக நடைபெறும் படுகொலைகளின் போது, பெரிய கட்சிகள் மௌனம் காப்பதாக திருமாவளவன் சாடியுள்ளார். புதிய கட்சிகளும் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை என தெரிவித்த அவர் ஆணவக் கொலையை விஜய்யால் கூட கண்டிக்க முடியவில்லை எனவும் விமர்சித்துள்ளார். தூத்துக்குடி சென்ற EPS, கவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
News August 12, 2025
தொடரும் போர்! மோடியிடம் கோரிக்கை வைத்த ஜெலன்ஸ்கி

ரஷ்யாவின் தாக்குதல் குறித்து PM மோடியுடன் ஜெலன்ஸ்கி தொலைபேசியில் பேசியுள்ளார். போர் நிலவரம் குறித்து ஜெலன்ஸ்கியிடம் கேட்டறிந்ததாக X தளத்தில் தெரிவித்த மோடி, போரை நிறுத்த இந்தியாவால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என உறுதி அளித்திருப்பதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், கச்சா எண்ணெய்யை ரஷ்யாவிடம் இருந்து வாங்குவதை நிறுத்த மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
News August 12, 2025
SPORTS ROUNDUP: WC ODI-யை வெல்வோம்.. ஹர்மன்பிரீத் கவுர்

◆சின்சினாட்டி ஓபன்: 3 மணி நேரம் நடந்த போட்டியில் அரினா சபலேங்கா(பெலாரஸ்) (7-3) 4-6 7-6 (7-5) என்ற செட் கணக்கில் போராடி எம்மா ராடுகானுவை (பிரிட்டன்) வீழ்த்தினார்.
◆மகளிர் உலக கோப்பையை கண்டிப்பாக வெல்வோம்.. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் உறுதி.
◆WC T20 2026 தொடருக்காக, சென்னை சேப்பாக்கம் மைதானம் மறுசீரமைக்கப்பட்டு வருகிறது.
◆ கர்நாடகாவில் புதிய கிரிக்கெட் மைதானம்.. 80,000 இருக்கை வசதி இருக்கும்