News March 30, 2024

தனியாருக்கு பிராஞ்சைசி கொடுக்கக் கூடாது

image

தொலைநிலை & ஆன்லைன் படிப்புகளுக்கு தனியாருக்கு பிராஞ்சைசி உரிமம் வழங்கி, அதன் வழியே மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது என யு.ஜி.சி., அறிவுறுத்தியுள்ளது. அதன் சுற்றறிக்கையில், “மாணவர் சேர்க்கையை (எல்லைகளுக்கு உட்பட்டு) மத்திய, மாநில & தனியார் பல்கலைக்கழகங்களே நேரடியாக நடத்த வேண்டும். தனியார் நிறுவனங்கள் வழியே மாணவர்களுக்கு புத்தகங்கள் & கல்வி பயன்பாட்டு கருவிகளை வழங்கக்கூடாது” எனக் கூறப்பட்டுள்ளது.

Similar News

News December 6, 2025

சமூகநீதியை காக்க உறுதியேற்போம்: விஜய்

image

தவெக அலுவலகத்தில் அம்பேத்கரின், படத்திற்கு மலர் தூவி விஜய் மரியாதை செலுத்தியுள்ளார். அம்பேத்கர் காட்டிய வழியில், சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மையை பேணிப் பாதுகாக்க உறுதியேற்போம் என சூளுரைத்துள்ளார். மேலும், அரசியலமைப்பு சட்டத்தின் வழியாக எளியவர்களுக்கும் அதிகாரம் வழங்கி எல்லோருக்கும் சட்ட உரிமைகள் கிடைக்க அடித்தளம் அமைத்தவர் அம்பேத்கர் என்றும் விஜய் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

News December 6, 2025

ஜார்கண்டிடம் சரணடைந்த தமிழ்நாடு அணி

image

சையத் முஷ்டாக் அலி கோப்பையில் 28 ரன்கள் வித்தியாசத்தில் ஜார்கண்ட் அணியிடம் தமிழ்நாடு வீழ்ந்தது. முதலில் விளையாடிய ஜார்கண்ட் அணியில் குமார் குஷாக்ரா(84), விராட் சிங்(72) ஆகியோர் TN பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். இதனால் தமிழ்நாட்டுக்கு 207 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், சாய் சுதர்சனை தவிர மற்ற வீரர்கள் சொதப்பியதால், 20 ஓவர்களில் 179 ரன்களை மட்டுமே எடுத்த TN, தோல்வியடைந்தது.

News December 6, 2025

AGF-PAK இடையே மீண்டும் வெடித்த மோதல்: 4 பேர் பலி

image

சவுதி அரேபியாவில் நடந்த அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், AGF-PAK இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. எல்லையில் நடந்த கடும் துப்பாக்கி சண்டையில் 4 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஆப்கன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யார் முதலில் மோதலை தொடங்கியது என்பதில், இருதரப்பும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், பொதுமக்களே சிக்கி தவித்து வருகின்றனர்.

error: Content is protected !!