News March 30, 2024

தனியாருக்கு பிராஞ்சைசி கொடுக்கக் கூடாது

image

தொலைநிலை & ஆன்லைன் படிப்புகளுக்கு தனியாருக்கு பிராஞ்சைசி உரிமம் வழங்கி, அதன் வழியே மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது என யு.ஜி.சி., அறிவுறுத்தியுள்ளது. அதன் சுற்றறிக்கையில், “மாணவர் சேர்க்கையை (எல்லைகளுக்கு உட்பட்டு) மத்திய, மாநில & தனியார் பல்கலைக்கழகங்களே நேரடியாக நடத்த வேண்டும். தனியார் நிறுவனங்கள் வழியே மாணவர்களுக்கு புத்தகங்கள் & கல்வி பயன்பாட்டு கருவிகளை வழங்கக்கூடாது” எனக் கூறப்பட்டுள்ளது.

Similar News

News January 11, 2026

தமிழ் எந்த பேதமும் காட்டாது: உதயநிதி

image

சாதி, மதம், முதலாளி, தொழிலாளி உள்ளிட்ட அனைத்தையும் தாண்டி நம்மை இணைத்திருப்பது தமிழ் தான் என்று DCM உதயநிதி கூறியுள்ளார். அயலக தமிழர் விழாவில் பேசிய அவர், தமிழ் மொழி யாரையும் வேறுபடுத்தி பார்க்காது, பேதமும் காட்டாது என்றார். மேலும், ஒன்றாக இணையாத எந்த இனமும் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை என்ற உதயநிதி, அயலகத் தமிழர்களும் தங்களது கனவுகளை தமிழக அரசிடம் தெரிவிக்கலாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News January 11, 2026

மகளிர் உரிமைத்தொகை உயர்வு.. இனிப்பான செய்தி

image

பொங்கல் முடிவதற்குள் பெண்களுக்கு இனிப்பான செய்தி ஒன்றை CM ஸ்டாலின் அறிவிப்பார் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, மகளிர் உரிமைத்தொகையை ₹2,000 ஆக உயர்த்தி வழங்க அரசு திட்டமிடுவதாக பேசப்படுகிறது. இந்நிலையில் அமைச்சர் கொடுத்த இந்த அப்டேட், மகளிர் உரிமைத்தொகை உயர்வை பற்றியதாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

News January 11, 2026

₹31,500 மானியம் கிடைக்கும்.. அரசு திட்டம்!

image

மத்திய அரசின் பரம்பரகத் கிரிஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், இயற்கை விவசாயம் செய்ய ஒரு ஹெக்டேருக்கு ₹31,500 மானியம் வழங்கப்படுகிறது. இதை பயன்படுத்தி விவசாயிகள் இயற்கை உரம், பூச்சிக்கொல்லிகள், மண்புழு உரம் போன்றவற்றை வாங்கிக் கொள்ளலாம். அத்துடன் இயற்கை விவசாயம் குறித்த பயிற்சியும் வழங்கப்படுகிறது. இதில் இணைய விவசாயியிடம் 1 – 5 ஏக்கர் நிலம் இருக்கவேண்டும். அப்ளை பண்ண <>Click Here<<>>. SHARE.

error: Content is protected !!