News March 30, 2024
தனியாருக்கு பிராஞ்சைசி கொடுக்கக் கூடாது

தொலைநிலை & ஆன்லைன் படிப்புகளுக்கு தனியாருக்கு பிராஞ்சைசி உரிமம் வழங்கி, அதன் வழியே மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது என யு.ஜி.சி., அறிவுறுத்தியுள்ளது. அதன் சுற்றறிக்கையில், “மாணவர் சேர்க்கையை (எல்லைகளுக்கு உட்பட்டு) மத்திய, மாநில & தனியார் பல்கலைக்கழகங்களே நேரடியாக நடத்த வேண்டும். தனியார் நிறுவனங்கள் வழியே மாணவர்களுக்கு புத்தகங்கள் & கல்வி பயன்பாட்டு கருவிகளை வழங்கக்கூடாது” எனக் கூறப்பட்டுள்ளது.
Similar News
News November 21, 2025
காஞ்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம்!

காஞ்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் வரும் 21.11.2025 அன்று 9.30 முதல் 3.00 மணி வரை மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது!
தகுதி: 8-ம் வகுப்பு, 10th, 12th, ITI, டிப்ளமோ, பட்டப்படிப்பு மற்றும் பொறியியல் படித்த அனைவரும் இதில் பங்கேற்கலாம்.
வேலை தேடுபவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திட www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தை அணுகவும்.
News November 21, 2025
நெல் ஈரப்பத அளவை 22%ஆக உயர்த்துக: அன்புமணி

நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 22% ஆக அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசை அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க மறுத்ததாக வெளியான செய்திகள் வருத்தமளிப்பதாக X-ல் அவர் பதிவிட்டுள்ளார். ஈரப்பத அளவு அதிகரிக்கப்படாவிட்டால் உழவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், நெல்லை குறைந்த விலைக்கு தனியாரிடம் விற்க வேண்டிய நிலை உண்டாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
News November 21, 2025
BREAKING: மீண்டும் அதிமுகவில் இணைந்தார்

திருவாரூரில் அமமுக நிர்வாகி மணிகண்டன் 500-க்கும் மேற்பட்ட தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைந்துள்ளார். Ex அமைச்சர் காமராஜ் முன்னிலையில், தன்னை மீண்டும் அதிமுகவில் இணைத்து கொண்ட அவர், மீண்டும் தாய்க் கழகத்தில் இணைந்ததில் மகிழ்ச்சி எனக் கூறினார். NDA கூட்டணியிலிருந்து TTV விலகிய பிறகு சென்னை, தஞ்சை, வேலூர், சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்து <<18211919>>அமமுக நிர்வாகிகள்<<>> அதிமுகவில் ஐக்கியமாகி வருகின்றனர்.


