News April 7, 2024
ரூ.325 கோடியை திரும்பப் பெற்ற FPI முதலீட்டாளர்கள்!

இந்திய பங்குச்சந்தையில் ஏப்ரல் முதல் வாரத்தில், பங்குகளில் முதலீடு செய்த ரூ.325 கோடி முதலீட்டை அன்னிய முதலீட்டாளர்கள் திரும்ப பெற்றுள்ளனர். பங்குகளின் மதிப்பு உச்சத்தில் இருப்பது, மக்களவைத் தேர்தல் ஆகிய காரணிகளால் முன்னெச்சரிக்கையாக அவர்கள் முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளதாக கருதப்படுகிறது. அதே நேரம், ஏப்ரல் முதல் வாரத்தில் ரூ.1,215 கோடியை அன்னிய முதலீட்டாளர்கள் புதிதாக முதலீடு செய்துள்ளனர்.
Similar News
News March 30, 2026
ஸ்நாக்ஸ் வாங்கும்போது இதை கவனிங்க!

குழந்தைகளுக்கோ பெரியவர்களுக்கோ, ஸ்நாக்ஸ் வாங்கும்போது பளபளப்பான பாக்கெட்டை மட்டும் பார்க்காதீர்கள், அதன் லேபிளையும் படியுங்கள் என FSSAI எச்சரித்துள்ளது. குறிப்பாக, அதில் உள்ள பொருள்களின் தகவல், FSSAI உரிம எண், காலாவதி தேதி, ஊட்டச்சத்து மதிப்புகள், சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பின் அளவு ஆகியவற்றை கவனிக்க வேண்டும்; ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம் என்பதை அறிவுறுத்தியுள்ளது.
News March 30, 2026
BREAKING: திமுகவில் இணைந்தார்.. இபிஎஸ் அதிர்ச்சி

மதுரை கிழக்கு தொகுதியின் அதிமுக Ex MLA தமிழரசன், சென்னையில் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். அவருடன் மேலூர் ஊராட்சி Ex ஒன்றிய தலைவர் பொன்னுச்சாமி, மேலூர் நகர்மன்ற உறுப்பினர் திவாகர் மற்றும் அவர்களது ஆதரவாளர்களும் திமுகவில் இணைந்துள்ளனர். இந்த இணைப்பின்போது அமைச்சர் மூர்த்தி உடனிருந்தார். தேர்தல் நேரத்தில் முக்கிய நிர்வாகிகள் விலகுவது EPS தரப்புக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
News March 30, 2026
இந்த ரயிலில் பயணிக்க டிக்கெட்டே வேண்டாம்!

பக்ரா-நங்கல்(பஞ்சாப் – இமாச்சல பிரதேசம்) ரயிலில் மட்டும் டிக்கெட் இல்லாமல் பயணிக்க முடியும். 1948-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ரயில் சேவை, பக்ரா-நங்கல் அணையின் கட்டுமானத்தில் முக்கிய பங்காற்றியதாம். அன்று இலவசமாக இயக்க தொடங்கப்பட்டு, இன்றும் அதே தொடர்கிறது. சட்லஜ் நதியை கடந்து சிவாலிக் மலைகளில் ஏறி இறங்கி 13 கி.மீ தூரம் இயற்கையை வருடி செல்லும் இந்த ரயிலானது 6 ஸ்டேஷன்களில் நின்று செல்கிறது.


