News April 7, 2024
ரூ.325 கோடியை திரும்பப் பெற்ற FPI முதலீட்டாளர்கள்!

இந்திய பங்குச்சந்தையில் ஏப்ரல் முதல் வாரத்தில், பங்குகளில் முதலீடு செய்த ரூ.325 கோடி முதலீட்டை அன்னிய முதலீட்டாளர்கள் திரும்ப பெற்றுள்ளனர். பங்குகளின் மதிப்பு உச்சத்தில் இருப்பது, மக்களவைத் தேர்தல் ஆகிய காரணிகளால் முன்னெச்சரிக்கையாக அவர்கள் முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளதாக கருதப்படுகிறது. அதே நேரம், ஏப்ரல் முதல் வாரத்தில் ரூ.1,215 கோடியை அன்னிய முதலீட்டாளர்கள் புதிதாக முதலீடு செய்துள்ளனர்.
Similar News
News December 10, 2025
பெற்றோர்களே இதை கவனியுங்க!

குழந்தைகளிடையே சமூக ஊடகங்களின் பயன்பாடு, அவர்களை வெகுவாக பாதிக்கும் என்று ஸ்வீடனின் கரோலின்ஸ்கா நிறுவனம் தெரிவித்துள்ளது. அவர்களால் நீண்ட நேரம் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த முடியாமல் போகும் என்றும், ADHD போன்ற அறிகுறிகள் உருவாகும் வாய்ப்பை அதிகரிக்கும் என்றும் எச்சரித்துள்ளது. மேலும், குழந்தைகளின் திரை நேரத்தைக் குறைப்பதில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிக்கை பரிந்துரைக்கிறது.
News December 10, 2025
செல்போன் ரீசார்ஜ் கட்டணம் உயர்கிறது

செல்போன் ரீசார்ஜ் கட்டணங்கள் மீண்டும் உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, 15% வரை கட்டணம் உயரலாம் என கூறப்படுகிறது. இதன்படி, பரவலாக பயன்படுத்தப்படும் 28 நாள்கள் வேலிடிட்டியுடன் கூடிய ₹299 பேக், ₹50 அதிகரிக்க வாய்ப்புள்ளதாம். இது நடுத்தர மக்களை பெரிதும் பாதிக்கும். கடந்த நவம்பரில், முன்னணி நிறுவனங்கள் தங்களது ப்ளானில் ₹10- 200 வரை உயர்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
News December 10, 2025
விஜய் ஹசாரே டிராபி: TN அணிக்கு ஜெகதீசன் கேப்டன்

டிச.24-ம் தேதி தொடங்கும் விஜய் ஹசாரே டிராபிக்கான (VHT) தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெகதீசன் தலைமையிலான அணியில் சாய் சுதர்சன், இந்திரஜித், சோனு யாதவ், சன்னி சந்து, சாய் கிஷோர், முகமது அலி உள்ளிட்ட 16 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். VHT-ல், 5 முறை சாம்பியனான TN அணி, கடந்த 2 முறை ஃபைனலுக்கு முன்னேறவில்லை. எனவே, இம்முறை சிறப்பாக விளையாடி மீண்டும் கோப்பையை வெல்லும் முனைப்பில் தமிழக வீரர்கள் உள்ளனர்.


