News September 14, 2024
RG Kar மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் கைது

கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் RG Kar மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மற்றும் ஒரு காவலரை CBI போலீசார் கைது செய்துள்ளனர். கொலை விவகாரம் பூதாகரமாக பின் சந்தீப் கோஷ் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் ஊழல் வழக்கில் CBI அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை நடத்திவந்த நிலையில், தற்போது கொலை வழக்கில் ஆதாரங்களை அழிக்க முயன்றதாக அவரை கைது செய்துள்ளனர்.
Similar News
News March 8, 2026
அஜித்குமார் போல் மற்றொரு மரணம்.. அடுத்த பரபரப்பு!

அஜித்குமார் மரணம் தமிழ்நாட்டையே உலுக்கிய நிலையில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அதேபோல் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த 6-ம் தேதி மதுபோதையில் இருவரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற வழக்கில் கைதான ஆகாஷ், சிறைக்கு அழைத்து செல்லும் வழியில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக போலீசார் கூறுகின்றனர். ஆனால், ஆகாஷை போலீசார் அடித்து கொன்றதாக அவரது தந்தை குற்றஞ்சாட்டியுள்ளார்.
News March 8, 2026
விஜய் மீதான பயத்தால் திமுக கூட்டணியில் அதிக கட்சிகளா?

விஜய் மீது உள்ள பயத்தால், அதிக கட்சிகளை கூட்டணியில் திமுக சேர்த்ததாக கூறுவது அறியாமை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். விஜய் கட்சி துவங்கும் முன்பே உருவான மெகா கூட்டணி இது; இதில் ஒருசில கட்சிகள் மட்டுமே புதிதாக சேர்ந்துள்ளன என்றார். விஜய் ஆட்சியில் பங்கு என கூறியும் தவெகவுடன் யாரும் கூட்டணி வைக்கவில்லை; இதை மூடி மறைப்பதற்குதான் இப்படிப்பட்ட கருத்தை திட்டமிட்டு பரப்புகின்றனர் என விமர்சித்தார்.
News March 8, 2026
₹1 செலவில்லை.. இலவச மருத்துவ ஆலோசனை!

பல இடங்களில் மருந்துச் செலவை விட, டாக்டரின் Consultation Fees மிக அதிகமாக உள்ளது. இது ஏழை எளிய மக்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. இதனை தவிர்க்க, மத்திய அரசு இ-சஞ்சீவனி என்ற திட்டத்தை வழங்குகிறது. இணையதளம் மூலம் தொலைபேசி / வீடியோ கால் மூலம் நோய்கள் & சிகிச்சைகள் பற்றி டாக்டரிடம் ஆலோசனை பெறலாம். இதில் வழங்கப்படும் இ-பிரிஸ்கிரிப்ஷனை வைத்து மருந்துகளும் வாங்கலாம். இப்பதிவை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.


