News September 14, 2024
RG Kar மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் கைது

கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் RG Kar மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மற்றும் ஒரு காவலரை CBI போலீசார் கைது செய்துள்ளனர். கொலை விவகாரம் பூதாகரமாக பின் சந்தீப் கோஷ் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் ஊழல் வழக்கில் CBI அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை நடத்திவந்த நிலையில், தற்போது கொலை வழக்கில் ஆதாரங்களை அழிக்க முயன்றதாக அவரை கைது செய்துள்ளனர்.
Similar News
News November 28, 2025
உக்ரைன்-ரஷ்யா போர்: அடம் பிடிக்கும் புடின்

உக்ரைன்-ரஷ்ய போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக உருவாக்கப்பட்ட <<18381416>>திருத்தப்பட்ட அமைதி திட்டத்தை<<>> புடின் நிராகரித்துள்ளார். போர் நிறுத்தப்பட வேண்டுமெனில், உக்ரைன் வசம் உள்ள குறிப்பிட்ட பகுதிகளை கண்டிப்பாக ரஷ்யாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். புடினின் இந்த பிடிவாதத்தால், போரை நிறுத்துவதற்கான அமெரிக்காவின் முயற்சிகள் இழுபறியாகவே நீடித்து வருகிறது.
News November 28, 2025
காலை உணவில் கட்டாயம் இது இருக்கணும்..

காலை உணவில் தயிரை சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் ப்ரோ-பயோடிக் இருப்பதால் வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை இது அதிகரிக்கிறது. இதனால், உடல் எடை குறையும், வயிற்று பிரச்னைகள் வராது, நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், நல்ல மனநிலையில் இருப்பீர்கள், மூளை செயல்பாடு நன்றாக இருக்கும் என டாக்டர்கள் சொல்கின்றனர். மொத்தத்தில் உங்கள் முழு உடலையும் பாதுகாக்கும் சூப்பர் ஃபுட்டாக தயிர் செயல்படுகிறது. SHARE.
News November 28, 2025
நேபாள புதிய ரூபாய் நோட்டில் இந்திய பகுதிகள்

நேபாளத்தில் நேற்று புதிய ₹100 நோட்டு வெளியிடப்பட்டது. அதில், உத்தராகண்டின் லிபுலேக், லிம்பியாதுரா & காலாபானி பகுதிகளின் படங்கள் இடம்பெற்றுள்ளது சர்ச்சையாகியுள்ளது. முன்னதாக, 2020-ல், முன்னாள் PM சர்மா ஒலி தலைமையிலான அரசு, இந்த 3 பகுதிகளையும் உள்ளடக்கிய புதிய நேபாள வரைபடத்தை வெளியிட்டது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்த நிலையிலும், அந்த வரைபடம் அந்நாட்டு பார்லிமென்டில் அங்கீகரிக்கப்பட்டது.


