News May 5, 2024

30 ஆண்டுகளில் முதன்முறையாக

image

கடும் வெயில் காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து வருகிறது. இந்நிலையில், கோவை மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க நீலகிரி மாவட்டம் மேல் பவானியில் இருந்து 200 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளை விட தற்போது கடும் வெப்பம் நிலவி வருவதால், 30 ஆண்டுகளில் முதன்முறையாக நீலகிரியில் இருந்து கோவைக்கு தண்ணீர் கொண்டுவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News August 19, 2025

FLASH: நாய் கடிக்கு ஒரே நாளில் 2 பேர் பலியான சோகம்

image

சென்னை, சேலத்தில் நாய் கடிக்கு அடுத்தடுத்து இருவர் உயிரிழந்தனர். சேலம், இலவம்பாளையத்தை சேர்ந்த குப்புசாமி(43) 2 மாதங்களுக்கு முன்பு நாய்க்கடியால் பாதிக்கப்பட்டார். அவர் முறையாக சிகிச்சை எடுத்து கொள்ளாததால் ரேபிஸ் நோய்க்கு ஆளாகி இன்று உயிரிழந்தார். இந்த அதிர்ச்சி மறைவதற்குள் சென்னை குமரன்நகரில் தடைசெய்யப்பட்ட Pit Bull நாய் கடித்ததில் கருணாகரன்(55) சற்றுமுன் உயிரிழந்தார். தெருவில் நாய்களிடம் உஷார்!

News August 19, 2025

லிப்ஸ்டிக் போடும் பெண்களே உஷார்..!

image

பெண்களின் மேக்கப்பில் கண்டிப்பாக இடம்பெறும் லிப்ஸ்டிக்கை, வாங்கும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் ஒன்று உள்ளது. லிப்ஸ்டிக் அட்டையில் ‘PPA Free’ என எழுதியிருந்தால் மட்டுமே வாங்குங்க. இந்த PPA(bisphenol A) இருக்கும் லிப்ஸ்டிக்கை உபயோகித்தால், உடலில் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படும் என எச்சரிக்கப்படுகிறது. பொதுவாக அனைத்து லிப்ஸ்டிக்கிலும் இது இருக்காது என்றாலும், கவனமாக இருந்துக்கோங்க!

News August 19, 2025

PM மோடியை சந்தித்த சீன அமைச்சர் வாங் யி

image

டெல்லியில் PM மோடியை சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, இரு நாட்டு எல்லைப் பிரச்னை, வர்த்தகம், கல்விக்கான விசா உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்தியா – சீனா இடையேயான நல்லுறவுக்கு இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!