News May 5, 2024

30 ஆண்டுகளில் முதன்முறையாக

image

கடும் வெயில் காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து வருகிறது. இந்நிலையில், கோவை மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க நீலகிரி மாவட்டம் மேல் பவானியில் இருந்து 200 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளை விட தற்போது கடும் வெப்பம் நிலவி வருவதால், 30 ஆண்டுகளில் முதன்முறையாக நீலகிரியில் இருந்து கோவைக்கு தண்ணீர் கொண்டுவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News November 12, 2025

வங்கதேசத்தில் மாணவர்கள் மீண்டும் போராட்டம்

image

வங்கதேசத்தில் அரசுக்கு எதிராக மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர். பள்ளிகளில் P.E.T மற்றும் இசை பயிற்றுவிக்கும் கலைஞர்களின் பணி நியமனத்தை அரசு ரத்து செய்துள்ளது. பட்ஜெட் கட்டுப்பாடுகளே இந்த முடிவிற்கான காரணம் என்று அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் அவை இஸ்லாமியத்திற்கு விரோதமானது என்று இஸ்லாமிய குழுக்கள் கொடுத்த அழுத்தமே பணி நியமன ரத்துக்கு காரணம் என்று மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

News November 12, 2025

RDX எவ்வளவு ஆபத்தானது தெரியுமா?

image

உலகின் மிகவும் ஆபத்தான வெடிபொருளான RDX (Royal Demolition Explosive), இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டதாகும். இதில் சிறிய அளவு வெடித்தால் கூட ஒட்டுமொத்த ஏரியாவும் சிதைந்து போகும். அதே நேரத்தில் IED என்பது RDX, TXT அல்லது அமோனியம் நைட்ரேட் ஆகியவற்றால் நிரப்பப்பட்ட ஒரு வெடிபொருள் சாதனமாகும். இந்த அனைத்து வெடிபொருள்களை ஒப்பிடுகையில், RDX மிகவும் ஆபத்தானது.

News November 12, 2025

சத்தீஸ்கரில் 6 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை

image

சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினரின் தாக்குதலில் 6 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பிஜப்பூர் தேசிய பூங்கா பகுதியில், இன்று காலையில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்திய போது, மோதல் வெடித்துள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 303 ரைபிள்ஸ், INSAS ரைபிள்ஸ், stenguns, பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

error: Content is protected !!