News April 13, 2024

இரவில் படுத்தவுடன் தூக்கம் வர இதை பின்பற்றலாம்

image

மன அழுத்தம், அதிக வேலை போன்றவை தூக்கமின்மைக்கு காரணமாக இருக்கின்றன. சிலருக்கு படுத்தவுடன் தூக்கம் வரும். உண்மையில் அது வரம். தூக்கமின்மையால் அவதிப்படுவோர், தினமும் ஒரே நேரத்தில் படுக்கைக்குச் சென்று எழுந்திருக்கும் பழக்கத்தை முயற்சிக்க வேண்டும். மேலும், இரவு உணவில் கூடுதல் கவனம் செலுத்தி திடமான, காரமான உணவுகளை தவிர்க்கலாம். தூங்குவதற்கு முன்னர் சூடான அல்லது மிதமான தண்ணீரில் குளியல் போடலாம்.

Similar News

News August 16, 2025

ஜெலன்ஸ்கி – புடின் சந்திப்பு விரைவில் நடக்கும்: டிரம்ப்

image

புடின் உடனான பேச்சுவார்த்தை வெற்றி அடைந்ததாக டிரம்ப் தெரிவித்துள்ளார். உக்ரைன் போரில் அமைதி நிலவும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், இது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள், NATO பொது செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், அனைத்தும் நன்றாக நடக்கும் பட்சத்தில் ஜெலன்ஸ்கி விரைவில் புடினை சந்திப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

News August 16, 2025

துணை ஜனாதிபதி: உத்தேச பட்டியலில் அண்ணாமலை?

image

துணை ஜனாதிபதி வேட்பாளர் தேர்வுக்கு வரும் 19-ம் தேதி ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இந்நிலையில், வேட்பாளருக்கான உத்தேச பட்டியலில் அண்ணாமலை பெயரும் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், JP நட்டா, ராஜ்யசபா துணை தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங், டெல்லி கவர்னர் சக்சேனா, குஜராத் கவர்னர் ஆச்சார்யா தேவ்விரத், Ex CM கர்பூரி தாக்கூரின் மகன் ராம் நாத் தாக்கூர் ஆகியோர் பெரும் பட்டியலில் உள்ளதாம்.

News August 16, 2025

உத்தமர் என்றால் ஏன் பூட்டு போட்டீர்கள்? EPS தாக்கு

image

தலைமை செயலகத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி அறைக்கு செல்லும் நுழைவு வாயிலுக்கு பூட்டு போட்டதை EPS விமர்சித்துள்ளார். உத்தமர் என கூறிக்கொள்ளும் நீங்கள், அறையை திறந்துவிடுங்கள் எனவும், எந்த தவறும் செய்யவில்லை என்றால் ஏன் அறையை பூட்டு போட்டு பூட்டி வைக்கிறீர்கள் என்றும் அவர் சாடியுள்ளார். முன்னதாக, அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் இன்று ED ரெய்டு நடத்தியது.

error: Content is protected !!