News October 20, 2025
அரசின் அலட்சியத்தால் வெள்ளத்தில் தவிப்பு: நயினார்

திமுக அரசின் அலட்சியத்தால் தேனி மாவட்டம் வெள்ளத்தில் தத்தளிப்பதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தேனி பழனிசெட்டிபட்டி ஆஞ்சநேயர் நகர் குடியிருப்பு பகுதிக்குள் ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. இதனை சுட்டிக்காட்டிய அவர், பருவமழை துவங்கும்முன் கால்வாய்கள் தூர்வாரப்படாததால் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளதாக விமர்சித்துள்ளார்.
Similar News
News October 20, 2025
கெடா கறி அடுப்புல கெடக்க.. இத கொஞ்சம் கவனிங்க

காலையிலேயே எழுந்து குளித்துவிட்டு புத்தாடை உடுத்திய பின்பு, பட்டாசில் கைவைப்பதற்கு முன், சாப்பிட்டு போ என்று ஒரு குரல் கேட்கும். உடனே இட்லியும், குடல் குழம்பு (அ) கோழி குழம்பை சாப்பிட்டிருப்போம். மதியமும் கறி விருந்து தயாராக, இடையிடையே பலகாரங்களும் நம் வயிற்றை பதம் பார்க்கும். இந்நிலையில், இவற்றையெல்லாம் செரிப்பதற்கு தேவையான உணவுகளை மேலே swipe செய்து பாருங்கள். உறவுகளுக்கும் ஷேர் பண்ணுங்க
News October 20, 2025
ODI போட்டியில் நடந்த மிகப்பெரிய Error!

இந்தியாவுக்கு எதிரான முதல் ODI-யில் 176.5 Kph வேகத்தில் ஆஸி.,யின் மிட்சல் ஸ்டார்க் பந்து வீசியதாக கூறப்பட்டது. இதன்மூலம், அதிவேகமாக பந்துவீசிய சோயப் அக்தரின்(161.3Kph) சாதனையை முறியடித்தார் என பாராட்டப்பட்டார். ஆனால் உண்மையில் அவர் அவ்வளவு வேகமாக பந்து வீசவில்லையாம். இது தொழில்நுட்பக் கோளாறால் நடந்த தவறு எனவும் அவர் 140.8 kmph வேகத்தில்தான் பந்துவீசினார் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
News October 20, 2025
தீபாவளிக்கு மட்டுமே திறக்கும் கோயில் தெரியுமா?

நாட்டில் விசித்திரமான கோயில்களுக்கு பஞ்சமே இல்லை. அப்படியான ஒரு கோயில், கர்நாடகாவின் ஹாசன் நகரில் உள்ள ஹாசனம்பா துர்கா தேவி கோயில். இக்கோயில் தீபாவளிக்கு மட்டுமே திறக்கப்படுகிறது. 10 நாள்களுக்கு கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. ஆனால், 7 நாள்களுக்கு மட்டுமே மக்கள் துர்கையை வழிபட அனுமதிக்கப்படுகிறார்கள். இந்நேரத்தில் தேவியின் ஆசீர்வாதத்தைப் பெறுவது மிகவும் நல்லது என நம்பப்படுகிறது.