News November 7, 2025

EXCLUSIVE விருதுநகரில் 16,421 பேரை கடித்த நாய்கள்

image

விருதுநகர் மாவட்டத்தில் 01.01.2024 முதல் 31.07.2025 வரை நாய்கடியால் 16,421 பேர் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் – 3134, அருப்புக்கோட்டை – 891, ராஜபாளையம் – 1311, திருச்சுழி – 1048, வத்திராயிருப்பு – 1674, சாத்தூர் – 2259 , காரியாபட்டி – 3145, சிவகாசி – 2959 பேர் நாய்கடியால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

Similar News

News November 7, 2025

சிவகாசியில் பட்டாசு தொழிலாளி பலி

image

ஆலங்குளம் அருகே கீழாண்மறைநாடு இந்திரா காலனியை சேர்ந்தவர் சின்ன முனியாண்டி (66). பட்டாசு தொழிலாளியான இவர் செவல்பட்டிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது சமத்துவபுரம் அருகே சென்றபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவரது பைக்கின் மீது மோதியது. விபத்தில் படுகாயமடைந்தவரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

News November 7, 2025

BREAKING விருதுநகருக்கு மஞ்சள் எச்சரிக்கை

image

தமிழக உள் பகு​தி​களின் ​மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நில​வு​கிறது. இதன் காரண​மாக தமிழகத்​தில் இன்று முதல் நவ.11 வரை ஒருசில இடங்​களில் இடி, மின்​னலுடன் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். இந்நிலையில் இன்று விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்காக மஞ்சள் அலட்ர்டை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் இது ஏற்ப தங்களது திட்டங்களை வகுத்து கொள்வது நல்லது.

News November 7, 2025

சிவகாசியில் கூடுதல் நீதிமன்றம் அமைக்க உத்தரவு

image

சிவகாசி பகுதியிலிருந்து தாக்கல் செய்யப்படும் வழக்குகளுக்காக இங்குள்ளவர்கள் ஸ்ரீவி, விருதுநகர் ஆகிய இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பல வழக்குகள் முடியாமல் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிவகாசியில் கூடுதல் மாவட்ட நீதி மன்றம் தொடங்க வேண்டும் என்ற வக்கீல்கள் சங்கத்தினர் கோரிக்கையை பரிசீலித்த சென்னை நீதிமன்ற பதிவாளர் கூடுதல் நீதிமன்றம் அமைக்க உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!