News August 25, 2024
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால்
▶இயல்: பாயிரவியல்
▶அதிகாரம்: அறன்வலியுறுத்தல்
▶குறள்: ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.
▶பொருள்: செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும்.
Similar News
News November 21, 2025
குளிர்காலத்தில் நரம்பை பலப்படுத்தும் பெஸ்ட் உணவுகள்

* ஆப்பிள், பேரிக்காய், ஆரஞ்சு, ஸ்டிராபெர்ரி, திராட்சை, ப்ளம்ஸ் ஆகிய குறைந்த கலோரி மற்றும் கிளைசெமிக் குறியீடு குறைவாக உள்ள பழங்களை எடுத்துக் கொள்ளலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர்.
*முந்திரி, பாதாம், வால்நட் ஆகிய வைட்டமின் பி நிறைந்த நட்ஸ் மற்றும் விதைகள் ஆகியவற்றை தினசரி டயட்டில் சேர்த்துக் கொள்ளலாமாம்.
*அசைவ உணவுகள் பொருத்தவரையில் ஒமேகா 3 கொழுப்பு நிறைந்த மீன் வகைகள் சிறந்ததாம்.
News November 21, 2025
CINEMA 360°: ‘அமரன்’ படத்துக்கு சிறப்பு கௌரவம்

*50-வது ஆண்டு பொன்விழாவையொட்டி மீண்டும் ‘SHOLAY’ படம் வெளியாகிறது. *’டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை இயக்கிய அபிஷன் ஜீவின்ந்த் கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய படத்தின் டைட்டில் டீசரை இன்று ரஜினிகாந்த் வெளியிட உள்ளார். *கவினின் ‘மாஸ்க்’ படத்தின் 4-வது சிங்கிள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. * 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பனோரமா பிரிவின் கீழ் தொடக்க திரைப்படமாக ‘அமரன்’ திரையிடப்படுகின்றது.
News November 21, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: சுற்றந்தழால் ▶குறள் எண்: 526
▶குறள்:
பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத்து இல்.
▶பொருள்: பெரிய கொடையுள்ளம் கொண்டவனாகவும், வெகுண்டு எழும் சீற்றத்தை விலக்கியவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றம் சூழ இருப்போர் உலகில் யாரும் இல்லை எனலாம்.


