News March 19, 2024
தினம் ஒரு திருக்குறள்

◾பால்: அறத்துப்பால்
◾அதிகாரம்: அடக்கமுடைமை
◾குறள்: 128
ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் நன்றாகா தாகி விடும்.
◾விளக்கம்: தீய சொற்களின் பொருளால் பிறர்க்கு வரும் துன்பம் சிறிதே என்றாலும் அந்தக் குறை ஒருவனிடம் இருந்தால் அவனுக்குப் பிற அறங்களால் வரும் நன்மையும் தீமையாகப் போய்விடும்.
Similar News
News January 11, 2026
காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரம்

புதுச்சேரி பாகூர் அருகே கஞ்சா போதையில் இருந்த சிறுவர்கள் 5 பேர், 9-ம் வகுப்பு மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது. மாணவியை காதலித்த 17 வயது சிறுவன் பாகூர் அருகே அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஏற்கெனவே இருந்த 4 சிறுவர்களுடன் சேர்ந்து இந்த செயலில் ஈடுபட்டது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த செயல் புதுச்சேரியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
News January 11, 2026
PSLV C-62 ராக்கெட் கவுண்ட்டவுன் தொடங்கியது!

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை காலை 10.17 மணிக்கு, PSLV C-62 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் நிலையில், 24 மணி நேர கவுண்ட்டவுன் இன்று காலை 10.17 மணிக்கு தொடங்கியது. DRDO சேவைக்காக வடிவமைக்கப்பட்ட EOS N1 செயற்கைக்கோளுடன், பல்வேறு நாடுகளை சேர்ந்த 17 வணிக செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்பட உள்ளன. இந்நிலையில் ராக்கெட், செயற்கைக்கோள்களின் ஒருங்கிணைப்பு பணிகள் நிறைவடைந்துவிட்டதாக ISRO தெரிவித்துள்ளது.
News January 11, 2026
எதுக்கு சமத்துவ பொங்கல்? வானதி

பொங்கலே கொண்டாடாத சிறுபான்மையின மக்களை வைத்து CM ஸ்டாலின் சமத்துவ பொங்கல் கொண்டாடுவதாக வானதி விமர்சித்துள்ளார். சிறுபான்மை மக்கள் அவர்களின் பண்டிகைகளை கொண்டாடுவதை மதிப்பதாக கூறிய அவர், எங்காவது சிறுபான்மை மக்கள் தமிழ் கலாச்சாரத்தோடு இணைந்து சூரியனை வணங்குவதை பார்த்திருக்கிறீர்களா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இதன்மூலம் அவர் இந்து மக்களை ஏமாற்றுகிறார் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.


