News March 19, 2024
தினம் ஒரு திருக்குறள்

◾பால்: அறத்துப்பால்
◾அதிகாரம்: அடக்கமுடைமை
◾குறள்: 128
ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் நன்றாகா தாகி விடும்.
◾விளக்கம்: தீய சொற்களின் பொருளால் பிறர்க்கு வரும் துன்பம் சிறிதே என்றாலும் அந்தக் குறை ஒருவனிடம் இருந்தால் அவனுக்குப் பிற அறங்களால் வரும் நன்மையும் தீமையாகப் போய்விடும்.
Similar News
News December 29, 2025
எந்த காளையை அடக்கினார் கருணாநிதி? சீமான்

தமிழ் சங்கம் நடத்திய பாண்டித்துரைதேவரின் பெயரை மதுரை நூலகத்திற்கு ஏன் வைக்கவில்லை என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். ஜல்லிக்கட்டுக்கும் கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம் என்ற அவர், காளை வளர்த்தாரா அல்லது அடக்கி காயம் பட்டாரா என கேட்டுள்ளார். மேலும், மதுரை மைதானத்திற்கு கருணாநிதி பெயருக்கு பதிலாக மூக்கையாதேவர் பெயரை வைத்திருக்கலாமே எனவும், எங்கள் அடையாளங்களை நிறுவுவதில் என்ன தவறு என்றும் பேசியுள்ளார்.
News December 29, 2025
திரிபுரா இனவெறிக்கொலை: 5 பேர் கைது

திரிபுராவை சேர்ந்த அஞ்சல் சக்மா (24) என்ற பழங்குடியின மாணவரை, சீனர் என கூறி போதை கும்பல் கத்தியால் குத்தினர். இதில் சிகிச்சையில் இருந்த அஞ்சல் 18 நாள்களாக சிகிச்சையில் இருந்த அஞ்சல் உயிரிழந்துள்ளார். இவ்விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்நிலையில், 2 சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு திப்ரா மோத்ரா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
News December 29, 2025
இந்த பிரச்னை இருந்தா முள்ளங்கி சாப்பிடாதீங்க

முள்ளங்கியில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் அதனை சாப்பிடுவது உடலுக்கு சிறந்ததுதான். ஆனால், தைராய்டு பிரச்னை இருப்பவர்கள் இதனை தொடவே கூடாது என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இது உங்கள் உடலில் தைராய்டு அளவினை அதிகரிக்க செய்துவிடும். எனவே மருத்துவரிடம் ஆலோசித்து, உங்கள் உடல்நிலைக்கு ஏற்ப முள்ளங்கியை எடுத்துக்கொள்ளுங்கள். பயனுள்ள தகவலை அனைவருக்கு SHARE பண்ணுங்க.


