News March 19, 2024
தினம் ஒரு திருக்குறள்

◾பால்: அறத்துப்பால்
◾அதிகாரம்: அடக்கமுடைமை
◾குறள்: 128
ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் நன்றாகா தாகி விடும்.
◾விளக்கம்: தீய சொற்களின் பொருளால் பிறர்க்கு வரும் துன்பம் சிறிதே என்றாலும் அந்தக் குறை ஒருவனிடம் இருந்தால் அவனுக்குப் பிற அறங்களால் வரும் நன்மையும் தீமையாகப் போய்விடும்.
Similar News
News September 18, 2025
BREAKING விஜய் கட்சிக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

தேர்தல் பரப்புரைக்கு பாரபட்சமின்றி அனுமதி வழங்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அனுமதி விவகாரம் தொடர்பாக தவெக தொடர்ந்த வழக்கை விசாரித்த கோர்ட், சேதமடையும் பொது சொத்துகளுக்கு இழப்பீடு வசூலிக்கும் வகையில் விதிகளை வகுக்கவும் அரசுக்கு ஆணையிட்டுள்ளது. மேலும், கட்சியின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் கடமை அதன் தலைவருக்கே உள்ளதாகவும், அசம்பாவிதங்களுக்கு அவரே பொறுப்பேற்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
News September 18, 2025
காணாமல்போன நகரங்கள்

பழங்காலத்தில் செழிப்பாக, வளர்ந்த நாகரீகம் கொண்ட சில நகரங்கள் அழிந்துபோனதாக வரலாறு கூறுகிறது. ஆனால், சில நகரங்கள் தற்போதும் இருப்பதாக வதந்திகளும், கட்டுக்கதைகளும் உள்ளன. காலத்தால் அழிந்துபோன நகரங்களின் போட்டோக்களை மேலே கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக பாருங்க. அதில் இல்லாமல் வேறு ஏதேனும் காணாமல்போன நகரம் உங்கள் தெரிந்தால் கமெண்ட்ல சொல்லுங்க.
News September 18, 2025
வாக்கு திருட்டு இப்படிதான் நடக்கிறது: ராகுல்

வாக்காளர் குறித்த அனைத்து தகவல்களும் ஒரே இடத்தில் இருப்பதால் தான் வாக்கு திருட்டு எளிதில் நடப்பதாக ராகுல் காந்தி பேசியுள்ளார். வாக்கு திருட்டை நடத்த, சாஃப்ட்வேர்களை வைத்து ஒவ்வொரு பூத்திலிருந்தும் முதல் வாக்காளரின் தரவு நீக்கப்படுகிறதாம். பின்னர், நீக்கப்பட்ட நபரின் தகவலை வைத்தே சிம் கார்டுகளை வாங்கி மற்ற தொகுதிகளில் வாக்காளராக சேர்ந்துகொள்ளும்படி விண்ணப்பிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.