News March 19, 2024
தினம் ஒரு திருக்குறள்

◾பால்: அறத்துப்பால்
◾அதிகாரம்: அடக்கமுடைமை
◾குறள்: 128
ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் நன்றாகா தாகி விடும்.
◾விளக்கம்: தீய சொற்களின் பொருளால் பிறர்க்கு வரும் துன்பம் சிறிதே என்றாலும் அந்தக் குறை ஒருவனிடம் இருந்தால் அவனுக்குப் பிற அறங்களால் வரும் நன்மையும் தீமையாகப் போய்விடும்.
Similar News
News January 5, 2026
வீட்டில் Air Fryer இருக்கா? அப்ப இத கவனிங்க!

Air Fryer பயன்பாடு மெல்ல அதிகரித்து வரும் நிலையில், இன்னும் அதன் பாதுகாப்பு குறித்த அச்சம் நிலவுகிறது. இதில் பெரிதாக அச்சுறுத்தல் இல்லை என சொல்லும் நிபுணர்கள் சில டிப்ஸ்களை கூறியுள்ளனர். *சமதளத்தில் வைக்கவும் *அருகே எரியும் பொருள்கள் இருக்கக்கூடாது *இதை சுற்றி காற்றோட்டம் இருக்க வேண்டும் *User Manual-ஐ படிக்கவும் *சமையல் டிரேவை சுடுநீரில் மென்மையான பஞ்சு (அ) துணி வைத்து சுத்தம் செய்யவும்.
News January 5, 2026
யாருடன் கூட்டணி? டிடிவி தினகரன் முக்கிய முடிவு!

பிரிவினைவாத அரசியல் TN-ல் எக்காலத்திலும் எடுபடாது, அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என அமமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. TTV, OPS ஆகியோர் தவெக அணியில் இடம்பெறுவார்கள் என செங்கோட்டையன் பேசியிருந்தார். இதனால், NDA கூட்டணிக்கு, TTV தினகரன் மீண்டும் செல்லப்போவதில்லை என்பதை இத்தீர்மானம் திட்டவட்டமாக உறுதிப்படுத்தியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். உங்கள் கருத்து என்ன?
News January 5, 2026
திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் நாளை தீர்ப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூண் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் ஹைகோர்ட் மதுரை கிளை நாளை தீர்ப்பு வழங்குகிறது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபமேற்ற தனிநீதிபதி G.R.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். அதனை எதிர்த்து TN அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைத்திருந்த நிலையில், நீதிபதிகள் ராமசந்திரன் மற்றும் ஜெயச்சந்திரன் அமர்வு நாளை தீர்ப்பு அளிக்க உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


