News March 24, 2024
ஈரோடு கணேச மூர்த்தி கவலைக்கிடம்

மதிமுகவை சேர்ந்த ஈரோடு எம்.பி கணேச மூர்த்தி தற்கொலை முயற்சி செய்து கவலைக்கிடமாக இருக்கிறார். கடந்த சில மாதங்களாகவே மன அழுத்தத்தில் இருந்த அவர், இன்று மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து, ஈரோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தற்போது மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்.
Similar News
News January 22, 2026
CM ஸ்டாலின் மீதான வழக்கின் இறுதி விசாரணை

2011 சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் CM ஸ்டாலின் வெற்றி பெற்றதை எதிர்த்து, அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு SC-ல் இறுதி விசாரணை தொங்கி உள்ளது. சைதை துரைசாமி தரப்பில், தேர்தல் செலவு வரம்பை மீறியதாகவும், பணப்பட்டுவாடா நடந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது. ஸ்டாலின் தரப்பில், தேர்தல் செலவுக்கு கட்டுப்பாடு இல்லாததே பெரிய பிரச்னை என வாதிடப்பட்டது.
News January 22, 2026
சற்றுமுன்: விஜய்க்கு அதிர்ச்சி

சட்டப்பேரவை தேர்தலில் தவெகவுக்கு பொதுச் சின்னம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ECI-யின் புதிய விதிமுறைகளின்படி, கட்சியின் வரவு செலவு கணக்கு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், தவெக இதை தவறவிட்டதாகவும், இதனால் பொதுச் சின்னம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பொதுச் சின்னம் இல்லையென்றால் ஒவ்வொரு வேட்பாளரும் தனி சின்னத்தில் போட்டியிட வேண்டிய நிலை ஏற்படும்.
News January 22, 2026
நான் திமுகவிலா.. வெல்லமண்டி நடராஜன்

வைத்திலிங்கம் நேற்று திமுகவில் இணைந்தார். அவருடன் வெல்லமண்டி நடராஜனும் திமுகவில் இணையப்போவதாக தகவல் வெளியாகிய நிலையில், அவர் இணையவில்லை. இதுகுறித்து பேசிய அவர், நான் திருச்சியில் தான் இருக்கிறேன். எனக்கு திமுகவில் சேரும் எண்ணம் இல்லை. OPS உடன் தொடர்ந்து பயணிப்பேன் என்று அவரது ஆதரவு யாருக்கு என்பதை தெளிவுப்படுத்தினார்.


