News November 19, 2024
பங்கு முதலீடு Vs கடனீட்டுப் பத்திரங்கள்

பங்குச்சந்தையில் ஒரு நிறுவனத்தின் பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கி, விற்பனை செய்வதை பங்கு முதலீடு (சமபங்கு) எனக் கூறலாம். பத்திரங்களின் வழியே முதலீட்டாளர்கள் மூலதனத்தை அளிப்பதை கடனீட்டுப் பத்திரங்கள் (கடன் மூலதனம்) என்று குறிப்பிடலாம். பங்குகளில் முதலீட்டாளர்களுக்கு லாபத்தில் ஈவுத்தொகை வழங்கப்படும். கடனீட்டுப் பத்திரங்களுக்கு நஷ்டத்திலும் வட்டி வழங்கப்படும். இதை பங்குகளாகவும் மாற்ற முடியும்.
Similar News
News March 12, 2026
சிலிண்டர் தட்டுப்பாடு.. கலெக்டர்களுடன் மீட்டிங்

சிலிண்டர் தட்டுபாடு எதிரொலியாக இன்று மாலை 4 மணிக்கு மாவட்ட கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் முருகானந்தம் ஆலோசனை நடத்துகிறார். மாவட்ட வாரியாக சிலிண்டர் கையிருப்பு மற்றும் தேவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக மாநிலம் முழுவதும் பெரும்பாலான ஹோட்டல்கள் மூடப்பட்ட நிலையில், வீட்டு கேஸ் சிலிண்டருக்கும் தட்டுப்பாடு ஏற்படுமோ என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
News March 12, 2026
எம்ஜிஆரை இழிப்படுத்திய நடிகர்.. விஷால் கண்டனம்!

* <<19348306>>எம்ஜிஆரை <<>>அவதூறாக பேசிய தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் நடிகர் விஷால் வலியுறுத்தியுள்ளார் * ரவி மோகனின் ‘Bro code’ படத்தின் பெயர் மாற்றப்படவுள்ளது *ராதிகா நடித்துள்ள ‘தாய் கிழவி’ படம் இதுவரை 57.9 கோடி வசூலித்துள்ளதாம் *‘மெளனம் பேசியதே’ படத்திற்கு பிறகு அமீரின் இயக்கத்தில் சூர்யா நடிப்பார் என தகவல் வெளிவந்துள்ளது.
News March 12, 2026
தமிழக கவர்னராக R.V.அர்லேக்கர் பதவியேற்றார்

தமிழகத்தின் புதிய பொறுப்பு கவர்னராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவியேற்றுக்கொண்டார். இவருக்கு சென்னை HC-ன் தலைமை நீதிபதி தர்மாதிகாரி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடந்த இந்த பதவியேற்பு விழாவில் CM ஸ்டாலின் பங்கேற்றார். ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தற்போது கேரளாவின் கவர்னராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது


