News March 26, 2025
கணக்கு போடுவதில் இபிஎஸ் கெட்டிக்காரர்: வேலுமணி

கணக்கு கேட்டு கட்சித் தொடங்கியவர்கள், தப்புக் கணக்கு போடுகின்றனர் என்று பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அதிமுகவை சீண்டினார். இதற்கு எஸ்.பி.வேலுமணி, இபிஎஸ் கணக்கு போடுவதில் பயங்கர கெட்டிக்காரர். எம்ஜிஆர், ஜெ., போன்று அவர் போடும் கணக்கு எப்போதும் சரியாகத்தான் இருக்கும். 2026இல் முடிக்க வேண்டியவர்களின் கணக்கை முடித்து (திமுக), இபிஎஸ் புதிய கணக்கை தொடங்குவார் என்று பதிலடி கொடுத்துள்ளார்.
Similar News
News July 11, 2025
கடன் வாங்கியவர்கள் நெஞ்சில் பாலை வார்த்த FM நிர்மலா

கடனை திருப்பி வசூலிக்கும்போது கஸ்டமர்களை கண்ணியமாக நடத்த வேண்டும் என வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு FM நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளார். டெல்லியில் Non-Banking Financial Company கூட்டத்தில் பேசிய அவர், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் தற்போது வழங்கும் கடன்கள் 24% ஆக உள்ளதாகவும், இது 2047-க்குள் 50% ஆக உயர்த்த வேண்டும் என்றார். இதனால் வரும் நாள்களில் பலருக்கும் கடன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
News July 11, 2025
குன்றக்குடி அடிகளாருக்கு CM ஸ்டாலின் புகழாரம்

திராவிட இயக்கத்திற்கு துணை நின்ற மாண்பாளர் என்று குன்றக்குடி அடிகளாரை CM ஸ்டாலின் புகழ்ந்துள்ளார். குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு நிறைவையொட்டி SM-ல் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அதில் அவர், தமிழில் அருச்சனை எனும் புரட்சியை முன்னெடுத்தவர் குன்றக்குடி அடிகளார் என்றும், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் என திராவிட இயக்கத்திற்கு துணை நின்ற மாண்பாளர் என்றும் புகழ்ந்துள்ளார்.
News July 11, 2025
சிறுநீரை ரொம்ப நேரம் அடக்குகிறீர்களா?

சிறுநீர் கழிப்பது இயற்கையின் அழைப்பு. ஆனால், பலரும் சோம்பலின் காரணமாகவோ, பிஸியாக இருப்பதாலோ சிறுநீர் கழிப்பதை தள்ளிப் போடுகின்றனர். இதனால் இதயம், மூளை, சிறுநீரகங்கள் பாதிக்கப்படலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். அதிக நேரம் சிறுநீரை அடக்குவதால் இடுப்பு தசைகள் பாதித்து, குழந்தையின்மை பாதிப்பு ஏற்படலாம். ஆகவே, சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படும்போதே, உங்கள் சிறுநீர்ப்பையை காலி செய்துவிடுங்கள்.