News March 26, 2025

கணக்கு போடுவதில் இபிஎஸ் கெட்டிக்காரர்: வேலுமணி

image

கணக்கு கேட்டு கட்சித் தொடங்கியவர்கள், தப்புக் கணக்கு போடுகின்றனர் என்று பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அதிமுகவை சீண்டினார். இதற்கு எஸ்.பி.வேலுமணி, இபிஎஸ் கணக்கு போடுவதில் பயங்கர கெட்டிக்காரர். எம்ஜிஆர், ஜெ., போன்று அவர் போடும் கணக்கு எப்போதும் சரியாகத்தான் இருக்கும். 2026இல் முடிக்க வேண்டியவர்களின் கணக்கை முடித்து (திமுக), இபிஎஸ் புதிய கணக்கை தொடங்குவார் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Similar News

News October 24, 2025

மனிதனிடம் இந்த திறமைகள் அழிஞ்சிட்டு வருது!

image

தற்போது, டெக்னாலஜி இல்லாமல் எந்த ஒரு வேலையும் செய்ய முடியாது என்ற நிலைக்கு மனிதன் வந்துவிட்டான். சிறு வேலையாக இருந்தாலும், ஒருவருக்கு டெக்னாலஜியின் உதவி தேவைப்படுகிறது. ஆனால், இப்படியான உதவியால், மனிதனிடம் இருந்த பல திறமைகள் மெல்ல அழிந்து வருகின்றன. அவை என்னென்ன என தெரிஞ்சிக்க மேலே உள்ள போட்டோஸை வலது பக்கம் Swipe பண்ணி பாருங்க. இன்னும் என்ன திறமையை எல்லாம் நாம் இழப்போம் என கமெண்ட் பண்ணுங்க?

News October 24, 2025

தங்கம் வாங்க இது சரியான நேரமா?

image

தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே போவதால், தற்போது தங்கம் வாங்குவது சரியான முதலீடா? இப்போது ஏறும் விலை திடீரென சரியுமா என பல சந்தேகங்கள் உள்ளன. ஆனால், இன்னும் 3 அல்லது 6 மாதங்களில் தங்கத்தின் விலை பெரிய உச்சத்தை அடையும் என நகை வியாபாரிகள் கூறுகின்றனர். அதனால், தற்போது கையில் காசு உள்ளவர்கள் பிக்சட் டெபாசிட்டுக்கு பதிலாக, தங்கத்தில் முதலீடு செய்யவும் அறிவுறுத்துகின்றனர்.

News October 24, 2025

தொழில் தொடங்க ₹10 லட்சம் வரை கடன் தரும் அரசு

image

சொந்த தொழில் தொடங்க ₹10 லட்சம் வரை கடன் தந்து, தொழிற்பயிற்சியும் தருகிறது மத்திய அரசின் ரோஸ்கர் யோஜனா திட்டம். இந்த கடனை பெற விண்ணப்பதாரர் 18 – 35 வயதுக்குட்பட்ட வேலையில்லாத நபராக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம். ₹1 லட்சத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும். கடனை பெற <>kviconline.gov.in<<>>- ல் விண்ணப்பியுங்கள். SHARE.

error: Content is protected !!