News April 28, 2025
இப்படி தர்பூசணியை சாப்பிட்டால் பிரச்னைதான்!

சம்மர் சீசனில் பலரும் விரும்பும் பழமாக இருக்கிறது தர்பூசணி. ஆனால், அதைச் சாப்பிடும்போது நிச்சயம் கவனம் வேண்டும். இல்லையேல், அது ஆரோக்கியத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம். சிலருக்கு வெறும் வயிற்றில் தர்பூசணி சாப்பிட்டால் வாயு ஏற்படலாம். அதே போல, அதிக அளவில் தர்பூசணியை சாப்பிடுவது ரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்தும். மேலும், பித்தம், வயிற்று பிரச்னை போன்றவை உண்டாக வாய்ப்பிருக்கிறதாம்.
Similar News
News January 13, 2026
பொங்கல் பண்டிகை.. தமிழக அரசு ஜாக்பாட் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு ஆகியவற்றில் 1,03,123 பேர் பணியாற்றுகின்றனர். இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இவர்களுக்கு சாதனை ஊக்கத் தொகையாக ₹85 – ₹625 வரை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கெனவே பொங்கல் பண்டிகைக்கு ₹3,000 பரிசுத் தொகை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
News January 13, 2026
கூட்டணிக்காக பாஜக அழுத்தம் கொடுக்கவில்லை: TTV

NDA கூட்டணியில் இணையலாமா, வேண்டாமா என்ற குழப்பத்தில் <<18846855>>TTV <<>>இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், கூட்டணி விவகாரத்தில் அமமுகவுக்கு எந்த அழுத்தமோ, தயக்கமோ, குழப்பமோ இல்லை என்று அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். உரிய நேரத்தில் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று உறுதிப்படுத்திய TTV, கூட்டணிக்காக பாஜக அழுத்தம் கொடுப்பதாக பொய் பரப்புரை மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
News January 13, 2026
2 பொருள் போதும்; கெமிக்கல் இல்லாத கண் மை ரெடி

பாதாம், நெய்யை வைத்து வீட்டிலேயே இயற்கையான, கண்மையை தயாரிக்கலாம். ➤ஒரு அகல்விளக்கில் நெய் ஊற்றி திரிவைத்து விளக்கை ஏற்றுங்கள் ➤அந்த விளக்கிற்குள் 2 பாதாம் பருப்புகளை வைக்கவும் ➤விளக்கிற்கு 2 பக்கங்களிலும் டம்ளரை வைத்து, அந்த டம்ளரின் மேல் ஒரு தட்டை வைக்கவும் ➤விளக்கின் தீபம் தட்டில் படுமாறு வைக்க வேண்டும் ➤தட்டில் படரும் கரியை எடுத்து, அதில் நெய் சேர்த்து கண்மையாக பயன்படுத்தலாம். SHARE.


