News April 28, 2025
இப்படி தர்பூசணியை சாப்பிட்டால் பிரச்னைதான்!

சம்மர் சீசனில் பலரும் விரும்பும் பழமாக இருக்கிறது தர்பூசணி. ஆனால், அதைச் சாப்பிடும்போது நிச்சயம் கவனம் வேண்டும். இல்லையேல், அது ஆரோக்கியத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம். சிலருக்கு வெறும் வயிற்றில் தர்பூசணி சாப்பிட்டால் வாயு ஏற்படலாம். அதே போல, அதிக அளவில் தர்பூசணியை சாப்பிடுவது ரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்தும். மேலும், பித்தம், வயிற்று பிரச்னை போன்றவை உண்டாக வாய்ப்பிருக்கிறதாம்.
Similar News
News December 25, 2025
மாதுளை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

பழங்களில் உள்ள ஊட்டச்சத்துகள், உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. குறிப்பாக மாதுளை பழத்தில் உள்ள விட்டமின் சி,கே உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அந்தவகையில், தினமும் ஒரு மாதுளை ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 25, 2025
கிறிஸ்துமஸ் நாளில் சோகம்.. பஸ் விபத்துகளில் 14 பேர் பலி

<<18664721>>திட்டக்குடி அருகே<<>> நேற்று அரசு பஸ் கார்கள் மீது மோதிய விபத்தில் 9 பேர் பலியாகினர். அதேபோல், தி.மலை அடுத்த ராஜந்தாங்கலில் இன்று காலை அரசு பஸ் கார் மீது மோதியதில் காரில் பயணித்த 3 பேர் உயிரிழந்தனர். செங்கல்பட்டு அருகே 2 அரசு பஸ்களுக்கு இடையில் சிக்கிய 2 இளைஞர்கள் துடிதுடித்து உயிரிழந்தனர். கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நாளில் அரசு பஸ்கள் அடுத்தடுத்து விபத்தில் சிக்கியது விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.
News December 25, 2025
PAK பெண்ணின் திருமண ஆஃபர்.. வாஜ்பாயின் Thuglife!

மறைந்த EX PM வாஜ்பாயின் 101 பிறந்தநாள் நிகழ்வில், அவரை பற்றிய ஒரு சுவாரஸ்ய தகவலை ராஜ்நாத் சிங் பகிர்ந்துள்ளார். 1999 பிப்ரவரியில் வாஜ்பாய் லாகூருக்கு பஸ்ஸில் பயணித்தார். அப்போது, ‘என்னை மணந்து, அதற்கு ஈடாக காஷ்மீரை தருவீர்களா’ என ஒரு பாக்., பெண்மணி கேட்டார். அதற்கு சரியென்ற வாஜ்பாய், வரதட்சணையாக பாக்.,ஐ கேட்டு அதிரச்செய்தார். இது அவரது ராஜதந்திரத்தை பிரதிபலிப்பதாக ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.


