News April 28, 2025
இப்படி தர்பூசணியை சாப்பிட்டால் பிரச்னைதான்!

சம்மர் சீசனில் பலரும் விரும்பும் பழமாக இருக்கிறது தர்பூசணி. ஆனால், அதைச் சாப்பிடும்போது நிச்சயம் கவனம் வேண்டும். இல்லையேல், அது ஆரோக்கியத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம். சிலருக்கு வெறும் வயிற்றில் தர்பூசணி சாப்பிட்டால் வாயு ஏற்படலாம். அதே போல, அதிக அளவில் தர்பூசணியை சாப்பிடுவது ரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்தும். மேலும், பித்தம், வயிற்று பிரச்னை போன்றவை உண்டாக வாய்ப்பிருக்கிறதாம்.
Similar News
News October 15, 2025
சங்கிலியை இழுத்தால் Train நிற்பது எப்படி?

ரயிலுக்கு அடியில் மிக நீளமான பைப் ஒன்று செல்கிறது. இந்த பைப்பில் காற்று நிறைந்திருப்பதால் அதன் அழுத்தத்தில் ரயில் நகர்கிறது. ஆனால் இந்த சங்கிலியை இழுக்கும்போது, ஒரு சிறிய துளை உருவாகி அந்த பைப்களில் உள்ள காற்று வெளியாகிறது. இதனால், ஏதோவொரு கோளாறு ஏற்பட்டிருப்பதை புரிந்துகொள்ளும் மெஷின் ஆட்டோமேட்டிக்காக அனைத்து பிரேக்களையும் அழுத்தி ரயிலை நிறுத்துகிறது. 99% பேருக்கு தெரியாத தகவலை SHARE பண்ணுங்க.
News October 15, 2025
கரூர் துயரத்திலும் திமுக அரசியல் செய்கிறது: EPS

கரூர் துயரத்தையொட்டி சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் கருப்பு பட்டை அணிந்து வந்தனர். இதனை பார்த்த சபாநாயகர் என்ன ரத்த கொதிப்பா என கேட்டதற்கு, EPS கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு திறனற்ற அரசின் அலட்சியத்தால் 41 உயிர்களை இழந்த கோபத்தில் ரத்தம் கொதித்து தான் கருப்பு பட்டை அணிந்தோம் என பதிலடியும் கொடுத்துள்ளார். துயரத்தில் கூட திமுக அரசு அரசியல் செய்கிறது எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.
News October 15, 2025
13 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு!

TN-ல் 13 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. அதன்படி, தேனி, தென்காசி, குமரி, நெல்லையில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், நீலகிரி, கோவை, திருப்பூர், தூத்துக்குடி, அரியலூர், பெரம்பலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தருமபுரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாம். தற்போது, தேனி, புதுக்கோட்டை, நெல்லையில் பரவலாக மழை பெய்து வருகிறது.