News April 28, 2025
இப்படி தர்பூசணியை சாப்பிட்டால் பிரச்னைதான்!

சம்மர் சீசனில் பலரும் விரும்பும் பழமாக இருக்கிறது தர்பூசணி. ஆனால், அதைச் சாப்பிடும்போது நிச்சயம் கவனம் வேண்டும். இல்லையேல், அது ஆரோக்கியத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம். சிலருக்கு வெறும் வயிற்றில் தர்பூசணி சாப்பிட்டால் வாயு ஏற்படலாம். அதே போல, அதிக அளவில் தர்பூசணியை சாப்பிடுவது ரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்தும். மேலும், பித்தம், வயிற்று பிரச்னை போன்றவை உண்டாக வாய்ப்பிருக்கிறதாம்.
Similar News
News December 3, 2025
மாதம் ₹20,500 கொடுக்கும் அசத்தல் திட்டம்!

போஸ்ட் ஆபீஸின் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) ஒவ்வொரு மாதமும் ₹20,500 வரை வழங்குகிறது. இத்திட்டத்தில் ₹30 லட்சத்தை முதலீடு செய்தால், 5 ஆண்டுகள் கழித்து 8.2% வட்டியுடன் ஆண்டுக்கு ₹2,46,000 Interest கிடைக்கும். இதை 12-ஆக பிரித்தால், ஒவ்வொரு மாதமும் ₹20,500 வரை ஓய்வூதியமாக பெறலாம். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இதில் சேரமுடியும். அருகில் இருக்கும் போஸ்ட் ஆபீஸை அணுகுங்கள். SHARE.
News December 3, 2025
சற்றுமுன்: பாஜகவில் இருந்து அதிரடி நீக்கம்

விவசாய அணியின் மாநிலத் துணைத் தலைவர் S.ராஜசேகரை கட்சியில் இருந்து நயினார் அதிரடியாக நீக்கியுள்ளார். ராஜசேகர் மீது அடுக்கடுக்கான பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. இந்நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாலும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாலும், கட்சி அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் நீக்கப்படுவதாக நயினார் அறிவித்துள்ளார்.
News December 3, 2025
பொங்கல் பரிசு: ரேஷன் அட்டைதாரர்களுக்கு ₹5,000?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்து, இந்தாண்டு பொங்கலுக்கு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் அரசு ₹5000 வழங்க இருப்பதாக செய்தி வெளியானது. ஆனால், அரசு தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், பொங்கலுக்கு ₹5,000 வழங்க அரசு முடிவெடுத்துள்ளதாக கூறியுள்ள நயினார், பொங்கல் பரிசுக்காக கூட்டுறவு வங்கிகளை அடமானம் வைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.


