News April 5, 2024
தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். கொருக்குப்பேட்டையில் வெண்புறாவை பறக்கவிட்டு அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோவுக்கு ஆதரவாக பரப்புரை செய்த அவர், ‘படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. மின் கட்டணம், அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை’ என்றார்.
Similar News
News March 15, 2026
BREAKING: தமிழ்நாடு தேர்தல் தேதி.. வெளியானது UPDATE

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதி இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக ANI நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் SIR மேல்முறையீடு பணிகள் இன்று நிறைவடைய உள்ளன. இதனால், வரும் செவ்வாய்கிழமை தேர்தல் தேதியை அறிவிக்க முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இன்று காலை 11 மணிக்கு தேர்தல் ஆணையர்களின் அவசரக் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும், அதன் பின்னர் தேர்தல் தேதி வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
News March 15, 2026
30 சிட்டிங் MLA-க்களுக்கு சீட் மறுக்கிறதா திமுக?

திமுகவுக்கு தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் பென் நிறுவனம், உளவுத்துறை ரிப்போர்ட், மற்றொரு தனியார் நிறுவனம் நடத்திய சர்வேயின் அடிப்படையில் திமுக வேட்பாளர் பட்டியல் தயாராகிறதாம். இதன்படி, செயல்பாடுகளின் அடிப்படையில் 30 சிட்டிங் MLA-க்களுக்கு சீட் கிடையாது என கூறப்படுகிறது. தேர்தல் செலவு உள்பட தொகுதிக்கு ₹20 கோடி வரை வேட்பாளர்கள் செலவு செய்ய வேண்டியிருக்கும் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News March 15, 2026
டெல்லியில் விஜய்யை சந்தித்தாரா த்ரிஷா?

கரூர் வழக்கு தொடர்பாக ஆஜராக விஜய் நேற்று டெல்லி சென்றார். அதற்கு முந்தைய நாளே மும்பை சென்ற த்ரிஷா, சில RSS, BJP பிரமுகர்களைச் சந்தித்து தவெக கூட்டணி தொடர்பாக பேசியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு நேற்று டெல்லி சென்ற த்ரிஷா, விஜய்யிடம் கூட்டணி தகவலை கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.


