News October 19, 2025

மழை சீசனில் இந்த கசாயம் குடிங்க!

image

மழைக் காலத்தில் கடும் இருமலால் பாதிக்கப்படுபவர்கள் இந்த கசாயத்தை குடிக்கும்படி, சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் *முதலில் முளைக்கீரையை சுத்தம் செய்து ஆய்ந்து ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ளவும் *ஒரு பாத்திரத்தில் 400 மி.லி அளவு தண்ணீர் ஊற்றி, அதில் அதிமதுரம் & மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க விடவும் *நீர் நன்கு கொதித்ததும், அதை வடிகட்டி குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கு பகிரவும்.

Similar News

News October 19, 2025

₹5,000.. அறிவித்தது தமிழக அரசு

image

வடகிழக்கு பருவமழை 2 நாளுக்கு முன் தொடங்கியுள்ளது. மழைக்காலங்களில் உப்பு உற்பத்திப் பணிகள் பாதிக்கப்படும் நேரத்தில் உப்பளத் தொழிலாளர்கள் மாற்றுப் பணி ஏதுமின்றி வருவாய் இல்லாமல் கடும் சிரமத்தை சந்திக்கிறார்கள். இதனால், அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இந்நிலையில், உப்பளத் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு ₹5,000 வழங்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 19, 2025

மதியம் வரை மழை வெளுக்கும்

image

பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வருகிறது. இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, அரியலூர், கோவை, கடலூர், குமரி, கரூர், மயிலாடுதுறை, நாகை, நாமக்கல், தென்காசி, தஞ்சை, திருவள்ளூர், திருவாரூர், நெல்லை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மதியம் ஒரு மணி வரை இடியுடன் கூடிய மழை வெளுக்கும் என IMD எச்சரித்துள்ளது. எனவே, தீபாவளி பர்சேஸ் செய்ய நினைத்தால், மதியத்திற்கு மேல் செல்லுங்கள்.

News October 19, 2025

மில்லியன் கணக்கான உயிரை காப்பாத்திருக்கேன்: டிரம்ப்

image

ஒவ்வொருமுறை போரை நிறுத்தும்போதும் அடுத்த போரை நிறுத்தினால் நோபல் பரிசு தருவார்கள் என தன்னிடம் பலர் சொல்வதாக டிரம்ப் கூறியுள்ளார். இதுவரை 8 போரை நிறுத்தி, மில்லியன் கணக்கான உயிர்களைக் காத்திருக்கிறோம் என்ற அவர், ஆனால் தனக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார். மேலும், ஏதோ ஒரு பெண்ணுக்கு நோபல் பரிசு கொடுத்ததாகவும், அவர் யார் எனத் தெரியவில்லை. ஆனால் அவர் அருமையானவர் எனவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!