News March 29, 2024
போலி அழைப்புகளை கண்டு ஏமாறாதீர்

வாட்ஸ்அப்பில் வரும் மோசடி அழைப்புகளை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு தொலைத் தொடர்பு துறை (DOT) அறிவுறுத்தியுள்ளது. மொபைல் எண்கள் துண்டிக்கப்படும் அல்லது சட்டவிரோத செயல்களில் மொபைல் எண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது எனக்கூறி வரும் அழைப்புகளை தவிர்க்குமாறு எச்சரித்துள்ள DOT, இத்தகைய அழைப்புகளால் சைபர் கிரைம் அல்லது நிதி மோசடிகளை செய்ய, தனிப்பட்ட தகவல்களை திருட வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது.
Similar News
News July 8, 2025
யாரும் நெருங்க முடியாத கங்குலியின் ரெக்கார்ட்!

இன்று ‘தாதா’ <<16986348>>கங்குலியின் <<>>பிறந்தநாள். ODI-ல் தொடர்ந்து 4 முறை ஆட்டநாயகன் விருது வாங்கிய ஒரே வீரர் செளரவ் கங்குலி தான். 1997-ல் சகாரா கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக வரிசையாக 4 போட்டிகளில் ஆட்டநாயகன் விருதை பெற்றார் கங்குலி. இந்த ரெக்கார்டை இன்று வரையிலும் யாராலும் வீழ்த்த முடியவில்லை. இது மட்டுமின்றி, ODI-ல் 11,363 ரன்களை குவித்து அதிக ரன்களை அடித்த 2-வது இந்தியரும் ‘தாதா’ தான்.
News July 8, 2025
வேன் விபத்தில் அக்கா – தம்பி உயிரிழந்த சோகம்

கடலூர், செம்மங்குப்பத்தில் <<16987835>>ரயில்<<>> மோதி பள்ளி வேன் விபத்துக்குள்ளானதில் சாருமதி (15), செழியன் (14) & விமலேஷ் (10) ஆகிய 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இவர்களில் சாருமதி & செழியன் ஆகிய இருவரும் அக்கா – தம்பி என்பது சோகத்தின் உச்சம். இரு குழந்தைகளையும் இழந்த அவர்களது பெற்றோர் ஹாஸ்பிடலில் கதறி அழும் காட்சிகள் நெஞ்சை உலுக்குகின்றன. மேலும், விஷ்வேஸ் மற்றும் டிரைவர் சங்கர் சிகிச்சையில் உள்ளனர்.
News July 8, 2025
கடலூர் துயரம்: அன்புமணி, டிடிவி, அண்ணாமலை இரங்கல்

கடலூரில் <<16987125>>பள்ளி வேன் மீது ரயில்<<>> மோதிய விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்த துயர சம்பவத்திற்கு அன்புமணி, அண்ணாமலை, டிடிவி, வேல்முருகன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதனிடையே, தமிழ் தெரியாதவர்களை தமிழ்நாட்டில் கேட் கீப்பராக நியமிக்கக் கூடாது என வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.