News March 23, 2025

திமுக அரசு நல்லா குறட்டை விட்டு தூங்குது: அன்புமணி

image

மதுரை தனக்கன்குளத்தில் நள்ளிரவில் நடந்த படுகொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். சிறையிலிருந்து தீட்டப்பட்ட சதியை கூட தடுக்க முடியாமல் திமுக அரசு குறட்டை விட்டு தூங்குவதாக அவர் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News March 25, 2025

கனிமொழி குற்றச்சாட்டுக்கு வானதி சீனிவாசன் பதில்

image

தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை கொண்டு வந்ததே பிரதமர் மோடிதான் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். KV பள்ளிகளில் தமிழாசிரியர்கள் இல்லை என்ற கனிமொழி குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர்,
புதிய கல்விக் கொள்கை நடைமுறைக்கு வந்த பிறகு, நிரந்தர தமிழாசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்றார். அந்தெந்த மாநில மொழி பாடங்கள் KV பள்ளிகளில் கற்றுத்தரப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

News March 25, 2025

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடரக் கூடாது: அண்ணாமலை

image

அமைச்சர் பதவியிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். ஜாமீன் கிடைக்க பொய் சொல்லி உச்ச நீதிமன்றத்தை ஏமாற்றிய செந்தில் பாலாஜி அமைச்சராக தொடரக்கூடாது எனவும் சாடியுள்ளார். முதல்வர் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது செந்தில் பாலாஜி மீது கூறிய குற்றச்சாட்டுக்களை மறந்து அவரை அமைச்சராக தொடர வைப்பது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

News March 25, 2025

முகம் பளிச்சிட இதை ட்ரை பண்ணலாமே…

image

✦மசித்த பப்பாளி மற்றும் தேன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் தடவி ஊற வைத்து சுமார் 15 – 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ சருமம் பொலிவாகும். ✦கடலை மாவை தண்ணீர் அல்லது பாலுடன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடத்திற்கு பின் முகம் கழுவ முகம் பளிச்சிடும். ✦மசித்த வாழைப்பழம், தேன் மற்றும் பால் கலந்து பேஸ் மாஸ்க் போட நல்ல பலன் கிடைக்கும்.

error: Content is protected !!