News March 16, 2024

தேர்தல் கால புகார் எண் வெளியிட்ட மாவட்ட காவல்துறை

image

மக்களவைத் தேர்தல்-2024 வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (மார்ச் 16) வெளியிட்டுள்ள அறிக்கையில் தேர்தல் கால புகார்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 1950,18004258373 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 8, 2025

இரவு காவல் உதவிக்கு இவர்களை தொடர்பு கொள்ளுங்கள்

image

போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்திமணி உத்தரவுபடி திருநெல்வேலி மாநகர பகுதியில் இன்று இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் மற்றும் அவர்களது கைபேசி விபரங்கள் மாநகர காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் அவசர காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு உதவி பெறலாம்.

News November 8, 2025

பொங்கல் – திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கம்

image

திருநெல்வேலி மாவட்டத்திற்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் அதிகம் வருவதால் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன் படி சென்னை, பெங்களூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் திருநெல்வேலிக்கு வருவதால் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என்று தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் இதற்கான முன்பதிவு 11ம் தேதி முதல் காலை 8 மணிக்கு துவங்குகிறது. *SHARE

News November 8, 2025

நெல்லை: காவல் ஆணையர்கள் இருவருக்கு பதவி உயர்வு

image

நெல்லை மாநகர காவல் அலுவலக நிர்வாக அலுவலர் அற்புதராஜ் முதுநிலை நிர்வாக அலுவலர் பதவி உயர்வு பெற்று சேலம் சரக டிஐஜி அலுவலகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். இதேபோல் தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலக நிர்வாக அலுவலர் ராமசுப்பிரமணிய பெருமாள், கோயம்புத்தூர் சரக டிஐஜி அலுவலகத்திற்கு முதுநிலை நிர்வாக அலுவலராக மாற்றம் செய்யபட்டார்.

error: Content is protected !!