News March 18, 2024

தென்னை மரங்களில் நோய் பரவல்

image

திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மடப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான தென்னை மரங்கள் உள்ளன. தென்னந்தோப்புகளில் உள்ள மரங்கள் பாதிக்கப்பட்டு வருவதுடன் வீடுகளில் வளர்க்கப்படும் மரங்களிலும் வெள்ளை ஈ தாக்குதல் பரவி வருகிறது. தென்னை மரங்களில் நோய் தாக்குதலால் 40 ஆண்டு பயன்தரக் கூடிய மரங்கள் கருகி பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

Similar News

News July 6, 2025

புளியால் அருகே கார் தலைகீழாக கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு

image

திருச்சியைச் சேர்ந்த கோபிநாத் தனது குடும்பத்துடன் ராமேஸ்வரம் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு இன்று தேவகோட்டை வட்டம் புளியால் அருகே சிலை மாநாடு என்ற இடத்தில் காரை ஓட்டி வரும்போது கார்நிலை தடுமாறி சாலையின் ஓரமாக பள்ளத்தில் கவிழ்ந்தது. அருகில் இருந்தவர்கள் அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் கோபிநாத் தாயார் உயிரிழந்தார்.

News July 6, 2025

ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் – மாவட்ட ஆட்சியர் தகவல்

image

சிவகங்கை மாவட்டம் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் வரும் ஜூலை 15 முதல் செப்டம்பர் 2025 மூன்றாம் வாரம் வரை மொத்தம் 215 முகாம்கள் மூன்று கட்டங்களாக காரைக்குடி மாநகராட்சியில் 27 முகாம்களும், சிவகங்கை, தேவகோட்டை, மானமதுரை ஆகிய நகராட்சிகளில் 31 முகாம்களும், 22 பேரூராட்சிகளில் 11 முகாம்களும் 12 சாதாரண ஊராட்சிகளில் 129 முகாம்களும் 3 புறநகர் ஊராட்சிகளில் 6 முகாம்களும் நடைபெற உள்ளது.

News July 6, 2025

சக்தி வாய்ந்த வெட்டுடையார் காளியம்மன்

image

கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில், மிகவும் சக்தி வாய்ந்த கோயில்களில் ஒன்றாகும். இங்குள்ள சத்ரு சம்ஹார வேல் கோயிலின் சிறப்பு. கடன், பிணி நீங்க, எதிரிகள் தொல்லை அகல, ராகு தோஷம் விலக இங்கு வழிபடலாம். பேசாத குழந்தைகள் பேச, பிரிந்த குடும்பத்தினர் ஒன்று சேர, நீதி பெறவும் இக்கோயில் பிரசித்தி பெற்றது. இதை *SHARE* பண்ணுங்க.

error: Content is protected !!