News May 13, 2024
பத்திர பதிவுத்துறை தலைவர் உத்தரவு

பரிவர்த்தனைக்காக வரும் சொத்து பத்திரங்களின் சரிபார்ப்பு நிலவரத்தை, அதை வாங்குவோர் தெரிந்துகொள்வதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என பதிவுத்துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார். மேலும், பத்திரங்களில் பிழை இருப்பதாகக் கூறி மக்களை அலைக்கழிக்கக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ள அவர், இந்த உத்தரவை சார்-பதிவாளர்கள் கடைப்பிடிப்பதை மாவட்ட பதிவாளர்கள், டிஐஜிக்கள் உறுதி செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.
Similar News
News March 30, 2026
இந்த ரயிலில் பயணிக்க டிக்கெட்டே வேண்டாம்!

பக்ரா-நங்கல்(பஞ்சாப் – இமாச்சல பிரதேசம்) ரயிலில் மட்டும் டிக்கெட் இல்லாமல் பயணிக்க முடியும். 1948-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ரயில் சேவை, பக்ரா-நங்கல் அணையின் கட்டுமானத்தில் முக்கிய பங்காற்றியதாம். அன்று இலவசமாக இயக்க தொடங்கப்பட்டு, இன்றும் அதே தொடர்கிறது. சட்லஜ் நதியை கடந்து சிவாலிக் மலைகளில் ஏறி இறங்கி 13 கி.மீ தூரம் இயற்கையை வருடி செல்லும் இந்த ரயிலானது 6 ஸ்டேஷன்களில் நின்று செல்கிறது.
News March 30, 2026
எடப்பாடியில் EPS ஜெயிப்பாரா பார்ப்போம்: செங்கோட்டையன்

தமிழ்நாட்டின் நாளைய நம்பிக்கை நட்சத்திரமாக விஜய் இருப்பதாக செங்கோட்டையன் பேசியுள்ளார். கோபிசெட்டிபாளையத்தில் அதிமுகதான் வெல்லும் என EPS கூறியதற்கு பதிலளித்த அவர், எடப்பாடி தொகுதியிலேயே EPS-ஆல் வெற்றிப்பெற முடியுமா என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்றார். கோபிசெட்டிபாளையத்தில் 9 முறை வெற்றிபெற்றதை மக்கள் தனக்கு அளித்த மாபெரும் கொடையாக கருதுவதாகவும் அவர் கூறினார்.<<-se>>#TNElection2026<<>>
News March 30, 2026
BREAKING: பிரசாரத்தை ரத்து செய்தார் விஜய்

CM ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் பிரசாரத்தை முடிந்த பின் வில்லிவாக்கத்தில் பிரசாரம் செய்ய விஜய் திட்டமிட்டிருந்தார். ஆனால், கொளத்தூரில் பேசி முடித்த உடனேயே, வில்லிவாக்கம் பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு விஜய் கிளம்பி போய்விட்டார். போலீசாரின் பாதுகாப்பு குறைபாடே பிரசாரம் ரத்து செய்யப்பட காரணம் என புஸ்ஸி ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார்.


