News August 7, 2024

ஈரோடு திமுக நிர்வாகிகளை புறக்கணித்தாரா உதயநிதி?

image

ஈரோடு திமுக நிர்வாகிகளை சந்திக்காமல் உதயநிதி ஸ்டாலின் புறக்கணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடுக்கு அண்மையில் வந்த உதயநிதியை வரவேற்க திமுகவினர் கடந்த 1ஆம் தேதி இரவு கருமாண்டம்பாளையம் பகுதியில் காத்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர்களை சந்திக்காமல் உதயநிதி சென்று விட்டதாகவும், இதேபோல் 2ஆம் தேதி கெஸ்ட் அவுசிற்கு வந்த நிர்வாகிகளையும் சந்திக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

Similar News

News July 11, 2025

ஜூலை 14-ல் பூமி திரும்பும் ஆக்சியம் 4 குழு

image

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் கடந்த ஜூன் 25-ம் தேதி ஃபுளோரிடாவின் கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்பட்டனர். அங்கு தங்களின் ஆராய்ச்சி பணிகளை முடித்துக்கொண்டு ஜூலை 10-க்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் பூமிக்கு திரும்பலாம் என்ற தகவல் இருந்தது. இந்நிலையில், ஜூலை 14-ல் இந்த ஆக்சியம் 4 குழு பூமிக்கு திரும்பவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

News July 11, 2025

‘செல்லம்மா… செல்லம்மா…’

image

Checked ஷர்ட், ஜீன்ஸ் பேண்ட்டில் சிம்பிளாக பிரியங்கா மோகன் வெளியிட்டுள்ள போட்டோஸ் வைரலாகி இருக்கிறது. கோல்டன் ஆரோ பாட்டுக்கு டான்ஸ் ஆடி இளைஞர்களின் நெஞ்சில் அம்புவிட்டவர், தற்போது பவன் கல்யாணின் ‘OG’ படத்தில் நடித்து வருகிறார். அவரது போட்டோஸ் பார்த்து, ‘கட்டம் போட்ட சட்டையில் கண்ணழகு நெருப்பாக, ஜீன்ஸ் நடையில் என் நெஞ்சு பனியாக கசிகுற லாவகமா’ என நெட்டிசன்கள் கவிதை பாட தொடங்கிவிட்டனர்.

News July 11, 2025

75 வயதில் ஓய்வு பெற வேண்டும்: மோகன் பகவத்

image

அரசியல் தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும் என RSS தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். PM மோடிக்கு தற்போது 74 வயதாகும் நிலையில், அடுத்தாண்டு அவரை ராஜினாமா செய்ய வைக்க RSS மறைமுகமாக அழுத்தம் கொடுத்து வருவதாக அரசியல் களத்தில் பேச்சு எழுந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு நாக்பூர் RSS அலுவலகத்திற்கு PM சென்றபோது இது தொடர்பாக பேசப்பட்டதாகவும் சொல்கின்றனர். மோகன் பகவத் கருத்து பற்றி உங்க கமெண்ட் என்ன?

error: Content is protected !!